கூகிள் குரோம் இயங்குதளம்

AM 8:06 வழங்கியவர் ameerdeen


இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது.

கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.

இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.

இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .

வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.

பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.

இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.

இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது.

Cookies என்றால் என்ன?

AM 8:02 வழங்கியவர் ameerdeen

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.

இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?

மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.

சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும்.

இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது.

இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும்

முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்..

அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது.

அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில் போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது.

குக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன.. ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

ஏனைய தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது.

சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும்.

இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும்.

எடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும்.

ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.

குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை.

இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது.

குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும்.

சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது..

அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது?

இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம்.

Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது.

அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும்.

பழைய குக்கீகளை நீக்கல்

முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும்.

General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்

மர்மமான கூகுல்

AM 7:58 வழங்கியவர் ameerdeen

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து.

மர்மமான கூகுல்(மிஸ்டிரி கூகுல்) http://www.mysterygoogle.com இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல எங்கிருந்தோ எடுக்கப்பட்ட ஒரு முடிவு வந்து நிற்கும்.

அநேக‌மாக‌ உங்க‌ளுக்கு முன் கூகுலில் தேடிய‌ ந‌ப‌ர் பார்த்த‌ இணைய‌ப‌க்க‌ம் மர்ம‌ கூகுலால் காட்ட‌ப்ப‌டும்.

ஒரு மெலிதான‌ ஆச்ச‌ர்ய‌த்தை அளித்து நீங்க‌ள் பார்க்க‌ வாய்ப்பில்லாத‌ புதிய‌ த‌ள‌த்தை உங்க‌ள் பார்வைக்கு வைத்து புதிய‌ அனுப‌வ‌ம் அளிப்ப‌தே இந்த‌ சேவையிப் நோக்க‌ம்.ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மர்ம‌ கூகுல் அழைத்துச்செல்லும் த‌ள‌ம் முற்றிலும் எதிர்பாராததாக ஆனால் சுவையான‌தாக‌ இருக்கிற‌து.

நெத்திய‌டி போல‌ தேட‌ல் முடிவுக‌ளை த‌ருவ‌தாக தேடியந்திரங்கள் பெருமைப்ப‌ட்டுக்கொள்ளும் நிலையில் தேட‌லில் சூவார்ஸ்ய‌த்தை புக்குத்தும் வ‌கையில் இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்யப்பட்டுள்ள‌து.

ஆறாவது புலன்…தகவல் தொழில் நுட்ப உலகில் ஒரு புதிய புரட்சி…!

AM 7:48 வழங்கியவர் ameerdeen


ஸ்பீல்பேக்கின் minority report பார்த்திருக்கிறீரகளா அதில் ரொம் குரூஸ் தனது கை அசைவுகளால் ஒரு பெரிய கணினி திரையில் தகவல்களை கையாண்டிருப்பார். ஸ்பீல்பேக்கினால் 2054 ஆம் ஆண்டில் என சொல்லப்பட்ட ஒரு விடயம் 2009 ஆம் ஆண்டிலேயே சாத்தியமாயிருக்கிறது அதுதான்.

உலகம் முழுவதும் இப்போது இதுதான் பேச்சு. இதை கண்டு பிடித்திருப்பவர் அமெரிக்காவில் உள்ள MIT media lab இன் பட்டதாரி மாணவனும் இந்தியாவை சேரந்தவருமான pranav mistry.

SIXTH SENSE – என்றால் என்ன…?

மனிதன் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களை கொண்டே தன்னை சுற்றி உள்ள உலகைப்பற்றி தகவல்களை பெற்றுக் கொண்டு அதற்கேற்ப சரியான செயற்பாட்டை மேற்கொள்கிறான். இந்த ஆறாவது புலன் என்ன செய்கிறது என்றால் நாங்கள் வாழும் சூழலிலேயே டிஜிட்டல் உலகத்தை பாரக்க வழி செயகிறது. முழு உலகையுமே கணினியாக மாற்றுகிறது. மொனிட்டர் தேவையில்லை Iphone தேவையில்லை எந்த ஒரு தட்டையான மேற்பரப்பும் போதும். விசைப்பலகை தேவையில்லை உங்கள் விரலகளே போதும்.

நீங்கள் நீனைத்த மாத்திரத்தில் உங்கள் விரலசைவுகளில் digital world விரிந்து கிடக்கும்.

கழுத்தில் தொங்கவிடப்படும் ஒரு சிறிய வெப் கமெரா. மினி புரஜெக்டர், இரண்டும் காவிச்செல்லக்கூடிய ஒரு கணினி அல்லது ஒரு செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். மினி புரொஜக்டர் எந்த மேறபரப்பையும் ஒரு interface ஆக மாற்றுகிறது. மினி கமரா உங்களின் விரல்களின் அசைவுகளையும் நீங்கள் பயனபடுத்தும் மேறபரப்பையும் வீடியோ எடுத்து கணினிக்கு அனுப்புகிறது. கணினியில் உள்ள மெனபொருள் மூலம் எல்லா தகவல்களும் அனலைஸ் செய்யப்பட்டு உங்கள் விரல் அசைவுகளாலேயே புரொஜெக்டரால் காடசிப்படுத்தப்படும் தகவல்களை கையாளவும் வழி செய்கிறது.

உங்கள் குழந்தைகளின் செயற்பாட்டை கண்காணிக்க ஒரு மென்பொருள்

AM 7:39 வழங்கியவர் ameerdeen


உங்கள் குழந்தைகள் இணையத்தில் மிக அதிக நேரம் செலவிடுகிறார்களா கொஞ்சம் உஷாராக இருக்கவும். கணிணி வழியாக உங்கள் குழந்தைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முகம் தெரியாத இணையத் தீவிரவாதிகள் உள்ளனர். அதற்கு என்ன செய்வது ? அவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு கவலையா உங்கள் கவலையை விடுங்கள்.

உங்களுக்கு என்று ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று முதலில் பதிவு கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேசன் மெயில் அனுப்புவார்கள். அதை ஆக்டிவேட் செய்யவும். பிறகு ஒரு மென்பொருள் தரவிறக்க கூறுவார்கள். இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் குழந்தை உபயோகிக்கும் கணிணியில் நிறுவி விடுங்கள்.

உங்கள் குழந்தைக்கென்று தனி யூசர் உருவாக்கியிருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கண்காணிக்க வேண்டிய யூசர்களை கொடுக்கவும் முடிந்தது. இனி வாரம் ஒரு முறை உங்கள் குழந்தைகள் எந்தெந்த தளங்களுக்கு அதிகசென்றுள்ளனர். எந்தெந்த மென்பொருட்களை அதிகம் உபயோகப்படுத்தியுள்ளனர் என்று உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள்.

சுட்டி

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

AM 7:30 வழங்கியவர் ameerdeen


சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும்.

அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் இணையதளத்தை கூகிள் / யாகூவுக்கு தெரிவிப்பது எப்படி?

AM 8:03 வழங்கியவர் ameerdeen

புதிதாக வலைப்பூ / வலைதளம் ஆரம்பித்திருப்பீர்கள். அந்த வலைப்பூவின் பெயரை கூகிள் / யாகூ தேடுபொறியில் தேடினால் முதலாவதாகவோ, முதல் பக்கத்திலேயோ அந்த முகவரி இடம் பெற்றே ஆகவேண்டும்.ஆனால் கூகிள் / யாகூவுக்கு புதிய தளங்களை crawl செய்த பிறகுதான் - அவற்றைப் பற்றி தெரியும். உங்கள் தளங்களை ஏராளமான சமுதாயக் குழுமங்களில் இணைத்தால் உங்களுக்கு நிறைய ட்ராஃபிக் கிடைக்கும்.

இலவசமானதும், வேகமானதுமான கூகிள், யாகூ - தேடுபொறியில் உங்கள் வெப்சைட்டை சேர்ப்பது எப்படி? அதை இப்போது பார்ப்போம். http://www.google.com/addurl/?continue=/addurl இந்த முகவரியைப் பின் தொடர்ந்து அதில் உங்கள் தளத்தின் முகவரியை உள்ளிட்டு captcha வை தட்டவும். (இது கூகிளுக்கு)http://siteexplorer.search.yahoo.com/submit இந்த முகவரியில் சென்று உங்கள் தளத்தைப் பதியவும். (இது யாகூவுக்கு)http://listings.yellowpages.com/Services/ServiceClaimSearch.aspx இங்கே சென்று பதிந்தால் Yellowpagesல் சேர்த்துவிடலாம் உங்கள் தளத்தை.

உங்களுக்கு பிடித்த இணையம் ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என அறிய...

AM 7:46 வழங்கியவர் ameerdeen


www. archive.org இத் தளம் சற்று வித்தியாசமானதும் சுவரசியமானதுமாகும்.
இத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் அறியலாம். நீங்கள் படத்தில் பார்ப்பது 1998 ஆம் ஆண்டு Google முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும். நீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்.

தள முகவரி: http://www.archive.org/

யாருடைய இணையத்தளம்...

AM 7:35 வழங்கியவர் ameerdeen

நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல் இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்) .

தள முகவரி : http://www.allwhois.com/

இந்தியர்களுக்கு உணவளிக்கும் ஒரு இணையத்தளம்.

AM 6:58 வழங்கியவர் ameerdeen


செலவே இல்லாமல் நமக்கு நன்மையை தேடித்தரும் இணைய தளம் ஒன்று உள்ளது. உணவில்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு உதவுகிறது. இந்த இணையதளத்திற்கு சென்று இலவச உணவு கொடுங்கள் என்ற மெனுவை கிளிக்கினால் போதும். நீங்கள் அன்றைய தினம் ஒருவருக்கு உணவு வழங்கிய பெறுவீர்கள் .
இந்த இணைய தளத்தை நடத்துபவர்கள் பல நிறுவனங்களை ஸ்பான்சராக வைத்துள்ளனர். இணையதளத்தை பார்ப்பவர்களின் மூலம் ஸ்பான்சர் நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால், ஒரு நபர் பதிவுக்கு சமமாக ஒரு நபருக்கு உணவளிக்கும் செலவை ஸ்பான்சர் நிறுவனம் ஏற்கும். ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் வருடத்திற்கு 25 லட்சம் பேர் பட்டினியால் இறக்கிறார்கள். இந்தியாவில் தினமும் சராசரியாக 7 ஆயிரம் பேர் பட்டினியால் இறக்கின்றனர் என்பது போன்ற வறுமையின் கொடூரத்தை விளக்கும், புள்ளி விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. கருணையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இணையதளம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

இதுதான் அந்தத்தளம்...www.bhookh.com

கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைப்பது எப்படி?

AM 8:25 வழங்கியவர் ameerdeen

நமது கணினியில் பல டிரைவ்கள் இருக்கக்கூடும். உதாரணமாக அவை கீழ்க்கண்டவாறு குறியீட்டு எழுத்துக்களால் அறியப்படும்.

மென் தகடு இயக்கி - ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ் - A
மென் தகடு இயக்கி - ஃபிளாப்பி டிஸ்க் டிரைவ் - B
வன் தகடு - ஹார்டு டிஸ்க் - C
வன் தகடு - ஹார்டு டிஸ்க் - D
குறுவட்டு இயக்கி - சி.டி டிரைவ் - E

(எத்தனை வன் தகடுகள் பகுதி உள்ளனவோ அதைத் தொடர்ந்த இயக்கியாக மட்டுமே குறுவட்டு இயக்கி வரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதாவது உங்களிடம் இருப்பது

ஹார்ட் டிஸ்க் - C மட்டுமே என்றால் சி.டி. டிரைவ் - D என்று வரும்.
ஹார்ட் டிஸ்க் - C மற்றும் D என்றால் சி.டி. டிரைவ் - E என்று வரும்.
ஹார்ட் டிஸ்க் - C,D மற்றும் E என்றால் சி.டி. டிரைவ் - F என்று வரும்.

இப்படியே தொடர்ந்து வரும் என்பதை நினைவில் கொள்ளவும். அல்லது இயக்கிகளின் குறியீட்டு எழுத்து என்ன என்பதை அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரைத் (My computer) திறந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.)

இப்போது கணினியில் சில ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினால், அப்படிப்பட்ட கோப்புகளை குறிப்பிட்ட வன் தகட்டில் சேமித்து, அந்த வன் தட்டின் பகுதிகளை சாதாரணமாக கணினியை இயக்குபவர்கள் கண்ணில் படாதவாறு மறைக்க இயலும். அவ்வாறு நாம் மறைக்க விரும்பும் பகுதி எதுவாக வேண்டுமென்றாலும், மென் தகடு இயக்கியாகவோ, குறுவட்டு இயக்கியாகவோ இருந்தாலும், மறைக்க இயலும்.)

இதை எவ்வாறு செய்வது என்பதைக் காண்போம்.

எச்சரிக்கை: நாம் செய்யப்போகும் மாற்றங்கள் Registry-யில் என்பதால் மிகுந்த கவனம் தேவை. சிறு பிழை கூட கணினியை செயலிழக்க வைக்கக்கூடும் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

1. "Start" பொத்தானை அழுத்தி, "Run" கட்டளையை தேர்வு செய்யுங்கள்.

2. வரும் திரையில் regedit என்று தட்டச்சி OK பொத்தானை அழுத்துங்கள்.

3. HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer பகுதிக்கு செல்லுங்கள்.

4. வலது பக்க திரையில் எலிக்குட்டியின் வலது பொத்தானை அழுத்துங்கள்.

5. New - DWORD value என்பதை தேர்வு செய்து, அதற்கு NoDrives எனப்பெயரிடுங்கள். (NoDrives என்பதில் இடைவெளி இல்லை என்பதை மறக்க வேண்டாம்.)

6. NoDrives- ன் மதிப்பு பூஜ்யமாக (0) இருக்கும் வரைக்கும், கணினியில் வேலை செய்யும் போது எல்லா டிரைவுகளும் நமக்குத் தெரியும்.

7. இப்போது கீழே தரப்பட்டிருக்கும் அட்டவணைப்படி, எந்த டிரைவை மறைக்க விரும்புகிறோமோ அதை தேர்வு செய்ய வேண்டும்.

8. NoDrives என்பதை எலிக்குட்டியின் வலது பொத்தானால் அழுத்தவும்.

9. Modify என்பதை தேர்வு செய்யவும்.

10. வரும் திரையில் கவனமாக "Decimal" என்பதை தேர்வு செய்யவும்.

Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G: 64
... ....
Z: 33554432
All Drives: 67108863

உதாரணமாக நீங்கள் மென் தகடு இயக்கி A: -ஐ மட்டும் மறைக்க விரும்புகிறீர்கள் எனில் மதிப்பை 1 என்று தரவேண்டும்.

A: மற்றும் D: டிரைவுகளை மறைக்க விரும்பினால், அந்த டிரைவுகளின் மதிப்பை கூட்டிக்கொள்ள வேண்டும். அதாவது 1+8=9 என்று வரும். ஆகவே மதிப்பாக 9 என்று தர வேண்டும். இப்படியே நாம் எத்தனை டிரைவுகளை வேண்டுமானாலும் மறைக்க இயலும்.

11. மதிப்பை உள்ளீடு செய்து விட்டு ரெஜிஸ்டிரியை விட்டு வெளியேறி விடுங்கள்!

12. மேலும் இன்னும் ஒரு முறையைக்கூட கையாளலாம். கணினியை உபயோகிப்பவர்களுக்கு "டிரைவ்" இருப்பது மட்டும் தெரியும். ஆனால் அந்த டிரைவில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் பார்க்க இயலாதவாறு செய்ய முடியும். அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மேலே குறிப்பிட்ட வழிமுறைகளைக் கையாண்டு, புதிய DWORD value என்பதில் NoViewOnDrive என்று உருவாக்கி, அட்டவணையில் குறிப்பிட்ட மதிப்பைத் தருவதன் மூலம் செய்யலாம்.

கூகுள் மெயில் ஷார்ட் கட் கீஸ்

AM 8:15 வழங்கியவர் ameerdeen

நம்மில் பெரும் பான்மையோர் பயன்படுத்துவது கூகுள் மெயில் அக்கவுண்ட் தான். இதில் உள்ள கீ போர்டு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் இதன் பயன்பாட்டை வேகப்படுத்தும். இது நம் வேலையைக் குறைப்பதுடன் இன்டர்நெட் பயன்படுத்துவதனையும் குறைத்து அதன் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் அல்லவா?


இதோ சில ஷார்ட் கட் கீகள்:


Shift+I:இமெயில் மெசேஜைப் படித்ததாக குறியீடு செய்வதற்கு


Shift+u:இமெயில் மெசேஜைப் படிக்காததாகக் குறியிட


Z: முந்தைய செயல்பாட்டை கேன்சல் செய்திட


?:கீ போர்டு ஷார்ட்கட் கீகள் குறித்த உதவிக் குறிப்புகளைக் காட்ட


c: புதிய இமெயில் மெசேஜ் ஒன்றை எழுதிட


/ : சர்ச் பாக்ஸில் உங்கள் கர்சரை நகர்த்த


u: உங்களுடைய இமெயில் அக்கவுண்ட்டை ரெப்ரெஷ் செய்து லேட்டஸ்ட்டாக வந்த இமெயில் மெசேஜைக் காண


!: இமெயில் மெசேஜ் ஒன்றை ஸ்பாம் மெயிலாகக் குறியிட


p:தற்போதைய மெயிலுக்கு முன் உள்ள மெயிலுக்குச் செல்ல


. : வெறும் புள்ளி அடித்தால் கூடுதலான ஆப்ஷன்ஸ் காட்டப்படும்


r:மெயிலை அனுப்பியவருக்கு பதில் அனுப்ப


a:அனைத்து மெயில் பெற்றவருக்கும் பதில் அனுப்ப


Ctrl+c:அப்போதைய இமெயிலை ட்ராப்டாக சேவ் செய்திட


Esc:கர்சரை தற்போதைய பீல்டிலிருந்து நகர்த்தும்.


ஜஸ்ட் எப் கீயை மட்டும் அழுத்தினால் இமெயில் செய்தியை அடுத்ததற்கு பார்வேர்ட் செய்திட முடியும்.

இறந்த பிறகும் இமெயில் அனுப்பலாம்!

AM 8:14 வழங்கியவர் ameerdeen

என்ன இது? இறந்த பிறகு யார் அனுப்புவார்கள்? முதலில் எப்படி கடிதம் எழுத முடியும்? யாருடைய இமெயில் அக்கவுண்ட்? என்ற சந்தேகமும், சிரிப்பும், ஒரு வேளை முடியுமோ என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் எழுகிறதா? ஆம் முடியும். இணையத்தில் எதுவும் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு. நீங்கள் இறந்த பிறகு நீங்கள் முன்பே தயார் செய்து வைத்த இமெயில் கடிதங்கள் உடனே துப்பாக்கி முனையில் இருந்து கிளம்பும் தோட்டாக்கள் போல நீங்கள் யாருக்கு எழுதினீர்களோ அவர்களுக்குச் செல்லும். இந்த தளத்தினை http://www.farawayfish.com என்ற முகவரியில் காணலாம். முதலில் இதற்கான கட்டாயம் அல்லது சூழ்நிலை என்ன என்று பார்ப்போம்.

நாம் என்றாவது ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். அதுவும் எதிர்பாராத தருணத்தில். பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பல விஷயங்களை நம் மனதில் வைத்திருப்போம். பேங்க் அக்கவுண்ட், லாக்கரில் இருக்கும் பணம், டாகுமெண்ட் மற்றும் நகை, பணம் கொடுத்து இன்னும் பதியாமல் இருக்கும் நிலம் மற்றும் வீடு, யாரை எல்லாம் நம்பக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்கு அறிவுரை, யாரை அவர்கள் கடைசி வரை காப்பாற்ற வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற இவை எல்லாம் உயிருடன் இருக்கையில் கொட்டித் தீர்த்துவிட முடியாது. ஆனால் திடீரென மரணம் சம்பவித்தால் என்ன செய்திட முடியும்? உயில் எழுதினால் தெரிந்துவிடாதா? யாரையாவது நம்பி எழுதி வைத்து இறந்தால் அவர் நம்பிக்கை மோசம் செய்துவிடமாட்டாரா? இந்த பதட்டத்திற்குத்தான் நமக்கு உதவிட வந்துள்ளது மேலே சொன்ன முகவரியில் உள்ள தளம். இந்த தளத்திற்குச் சென்றால் நம்மைக் கவரும் ஓர் இடம் – நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள், மாதங்கள் உயிர் வாழ்வீர்கள் என்று ஒரு கணக்குப் போட்டு சொல்லும் இடம் தான். உங்கள் பெயர், வயது, ஆண் மற்றும் பெண் போன்ற விபரங்களைக் கேட்ட பின் நீங்கள் புகை பிடிக்கிறீர்களா? மது குடிக்கிறீர்களா? உங்கள் எடை மற்றும் உயரம் என்ன என்று கேட்டு இத்தனை ஆண்டுகள் நீங்கள் உயிர் வாழலாம் என்று ஹேஷ்யமாக ஒரு கணக்கிட்டுச் சொல்கிறது. ஆண்டுக் கணக்கை அடுத்து அதனை எத்தனை நொடிகள் என்றும் ஒரு கடிகாரக் கணக்கு மாதிரி காட்டுகிறது. இதில் நம் மரணத்திற்கு விதித்த காலம் நொடிகளில் குறைவதைக் காண மனதிற்குப் பக் என்கிறது.


சரி, முக்கிய விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் பதிந்து கொண்டால் உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படுகிறது. அதனைக் கிளிக் செய்தால் இந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது. இதில் உங்களின் எண்ணங்களைப் பதிந்து வைக்கலாம். உங்கள் கொள்கைகளை எழுதி வைக்கலாம். அவை நீங்கள் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு அறிவிக்கும் வகையில் ஓர் இணைய தளமாகக் கிடைக்கும். பத்து ஆண்டுகளுக்கு இவை இணைய வெளியில் இருக்கும்.


அடுத்ததாக நீங்கள் யாருக்கெல்லாம் உங்கள் செய்தியை, எண்ணங்களை, அறிவுரையை, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை அறிவுறுத்த வேண்டுமோ அவர்களின் இமெயிலுக்கு அதனை செய்தியாக கடிதம் எழுதி வைக்கலாம். இவை உங்களுக்கென ஒதுக்கப்பட்ட தளத்தில் பாதுகாக்கப்படும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மட்டும் இதனை எடிட் செய்து மாற்றலாம்; புதிய செய்திகளை தகவல்களை இணைக்கலாம். இத்தனை மெயில்களை இதுவரை நீங்கள் சேமித்து வைத்துள்ளீர்கள் என்று விவரங்கள் உங்களுக்குக் காட்டப்படும்.


சரி, இந்த செய்திகள் நீங்கள் இறந்த பின்னர் எப்படி மற்றவர்களுக்கு அனுப்பப்படும்? முதலில் செய்திகளை அமைக்க எப்படி இடம் ஒதுக்கப்படும். இந்த தளத்தில் நுழைந்தவுடன் உங்கள் பெயர், இமெயில் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றைப் பதிந்தால் நீங்கள் தரும் இமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதனைக் கிளிக் செய்தால் அந்த தளத்தில் உங்களுக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்படும். இங்கு தான் நீங்கள் எழுதும் எண்ணங்களும் தகவல்களும் மற்றும் அமைத்திடும் இமெயில் செய்திகளும் பாதுகாக்கப்படும். பாடல்களைப் பதிந்து வைக்கலாம்; வீடியோ காட்சிகளையும் இதில் பதியலாம்.


அடுத்ததாக யார் இந்த இமெயில் செய்திகளை அனுப்புவார்கள். நீங்கள் உங்களுக்கு நம்பிக்கையான மூன்று பேர் குறித்த தகவல்களையும் இமெயில் முகவரிகளையும் அனுப்ப வேண்டும். இவர்களை இன்பார்மர்கள் என இந்த தளம் அழைக்கிறது. இவர்கள் தான் நீங்கள் இறந்தவுடன் இந்த தளத்திற்கு செய்தி அனுப்புபவர்கள். இவர்களுக்கு இந்த தளத்தை நிர்வகிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்களையும் பாஸ்வேர்ட் ஒன்றையும் பாதுகாப்பான லிங்க் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். உங்களின் உயிர் நண்பர்களாக, உறவினர்களாக இவர்கள் செய்ய வேண்டிய ஒரே செயல் நீங்கள் இறந்தவுடன் இவர்களுக்கு தெரிவிக்க வேண்டியதுதான். உடனே இந்த தளம் மூன்று பேருக்கும் தகவல் அனுப்பி நீங்கள் இறந்ததை உறுதி செய்யும். ஏன், உங்கள் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும். 12 வகையான சோதனை 18 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே நீங்கள் எழுதி வைத்த தகவல்கள் அடங்கிய தளம் உலகிற்கு காட்டப்படும். நீங்கள் எழுதி வைத்த இமெயில்கள் (இலவச சேவையில் 25 பேருக்கு அனுப்பலாம்) சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். இத்தனை நிலைகள் இருந்தாலும் அனைத்துமே நாம் மேற்கொள்ளும் வகையில் எளிமையானதாக உள்ளன. இறந்த பிறகு இறவாப் புகழ் பெற இந்த தளத்தை அணுகலாம். உங்களின் இறுதி செய்திகள் உற்றவர்களுக்கு உங்களுக்குப் பின் சென்று சேர இதனைப் பயன்படுத்தலாம். இலவசமாக இதனைப் பயன்படுத்த எண்ணினால் ஓர் ஆண்டுக்கு மட்டுமே முடியும். அதாவது பதிந்து ஓர் ஆண்டில் நீங்கள் இறந்துவிட்டால் இலவசமாக செயல்படுத்தப்படும். அதற்கும் மேலான காலத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.


இதன் சிறப்புகளைப் பார்ப்போம்: நீங்கள் அமைத்திடும் செய்திகள் மற்றும் இமெயில்களை உங்களைத் தவிர யாரும், இன்பார்மர்கள் உட்பட, பார்க்கவோ படிக்கவோ எடிட் செய்திட முடியாது. இறப்பதற்கு முன் தானாக இவை அனுப்பப்பட்டுவிடுமா? நிச்சயம் 100% இல்லை. பல வகையான சோதனை மேற்கொண்ட பின்னர், இறந்தது உறுதி செய்யப்பட்ட பின்னரே செய்திகள் அனுப்பப்படும். உங்கள் இன்பார்மார்கள் மூன்று பேரும் இணைந்து தவறு செய்தால் தான் பிரச்சினை ஏற்படும். அப்போதும் இந்த தளம் சில ரகசிய சோதனைகளை மேற்கொள்ளும். இன்பார்மர்களை மிகக் கவனத்துடன் தேர்ந்தெடுத்து தளத்திற்கு அறிவியுங்கள். இவர்களை மாற்ற வேண்டும் என இடையே எண்ணினால் மாற்றலாம். தள நிர்வாகிகள் இவர்களுடன் பேசி இந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுவார்கள்.

இலவச சேவை எனில் உங்கள் தளம் மரணத்திற்குப் பின் ஓராண்டும் கட்டண சேவை எனில் 9 ஆண்டுகளும் இருக்கும். உங்கள் நண்பர்கள் யாரேனும் தொடர்ந்து பணம் செலுத்தினால் இணையத்தில் தொடர்ந்து உங்கள் தளம் இடம் பெறும். நீங்கள் சேவ் செய்து வைத்த பைல்களின் பார்மட்டுகள் காலப்போக்கில் மாறுதல் அடைந்தால் தளம் அவற்றை அப்டேட் செய்திடும். நீங்கள் செலுத்தும் பணத்திற்கு ஒப்புதல் பற்றுச் சீட்டினை இந்த தளம் வழங்கிடும். எனவே பணத்திற்குப் பாதகமில்லை.

இன்பார்மர்களிடம் நான்கு முறை இமெயில் மூலம் பல வழிகளில் கேட்கப் பட்ட பின்னரே உங்கள் கடிதங்களை அனுப்ப அனுமதி வழங்கப்படும். உங்கள் இமெயிலுக்கும் பல முறை இமெயில் அனுப்பப்பட்டு மரணம் உறுதி செய்யப் படும். சற்று கூடுதலாக கட்டணம் செலுத் தினால் எஸ்.எம்.எஸ். மூலமும் மரணம் உறுதி செய்யப்படும். உங்களுடைய பாஸ்வேர்ட் மற்றும் பின் எண் மறந்து போனால் தளத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை அறிவிக்கப்படும்.

உலகின் 10 மோசமான பாஸ்வேர்ட்கள்

AM 8:10 வழங்கியவர் ameerdeen

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக இ-மெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.

இந்த பாஸ்வேர்ட்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் என்ன என்று ஆராயப்பட்டது.

இதில் `123456' என்ற எண்கள் தான் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஸ்வேர்ட் என்ற பெயரே அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தங்களது முதல் பெயர் மற்றும் ஒரே சொல்லை பலமுறை பயன்படுத்துவது ஆகியவையும் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்துகின்றனர்.

`பாண்ட்007', `கோகோகோலா' போன்ற சொற்கள் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள பாஸ்வேர்ட்களை ஒன்பதில் ஒருவரும், முதல் இருபது இடங்களில் உள்ள பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளவற்றை 50ல் ஒருவரும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு நபர் அதிக பட்சமாக 15 பாஸ்வேர்ட்கள் வரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்றும், 61 சதவிகிதம் பேர் பல்வேறு கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்ட்டை வைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

VoIP - இணையத் தொலைபேசி

PM 1:50 வழங்கியவர் ameerdeen



மிகக் குறைந்த செலவில் எண்ணிக்கையில் அடங்காத அளவில் சர்வதேச நகரங்களுக்கு தொலைபேசுவதற்கு VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பம் உதவுகிறது.

இடையூறு இல்லாத நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகிறது.

VoIP என்பதன் விரிவு - Voice Over Internet Protocol

பழைய நுட்பத்தில் ஒலியை கம்பி வழியாகக் கடத்தினார்கள், சிலகாலத்திற்கு முன்பு செல்பேசி (cellphone) வந்தது. இப்போது VoIP தொலைபேசி.

VoIP நுட்பத்தில் ஒலியை அதிவேக அகலப்பட்டை (broadband)யுடன் கூடிய இணையத்தில் கடத்துவார்கள்.

நமது வீட்டில் இருக்கும் தொலைபேசிக் கருவியைப் பயன்படுத்தாமல், அதற்கு மாற்றாக இணையத் தொலைபேசியைப் பயன்படுத்துவது இதன் முக்கிய அம்சம்.

இதற்கு internet telephony என்றும் பெயருண்டு.

நாம் பேசும் பேச்சின் ஒலியை சிறு சிறு பொட்டலங்களாக (SIP) மாற்றி அவற்றை இணையம் மூலமாக அனுப்பி அடுத்த முனையில் இருப்பவரது கணினிக்கு அனுப்புவதே இந்த நுட்பமாகும்.

சிறப்பம்சங்கள் :

1) மிகக்குறைந்த செலவில் அதிக நேரம் பேசி மகிழலாம்.
2)மிக எளிமையாகக் கையாள இயலும்
3) பழங்காலத்து PABX (Private Automatic Branch Exchange) எனப்படும் நுட்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. இதில் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு நவீனத்துவம் பெற்றிருக்கிறது.
4) மின்னஞ்சலை எவ்வாறு எந்தக் கணினியிலும் அனுப்ப / படிக்க முடிகிறதோ, அதேபோல VoIP தொலைபேசுவதை எந்தக் கணினியில் இருந்தும் மேற்கொள்ளலாம்.
5) Call forwarding, call waiting, voice mail, caller ID ஆகிய வசதிகளும் இதில் உண்டு.

இணைய பக்கத்தை எடிட் செய்ய

AM 7:26 வழங்கியவர் ameerdeen

நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் இணைய தளத்தை லைவ் -ஆகா edit செய்ய, கீழே உள்ள code-ஐ copy செய்து உங்கள் address bar -இல் பேஸ்ட் செய்யவும்.
javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0
அதன் பிறகு, அந்த இணைய தளத்தை நீங்கள் வேர்ட்-இல் எடிட் செய்வது போல் எடிட் செய்யலாம்..
உதாரணத்திற்கு தினதந்தி வெப்சைட்-இல் உங்களைப்பற்றிய செய்தியை நீங்கள் எடிட் செய்து (அல்லது உருவாக்கி) கொள்ளவும் . பின் அந்த screen-shot எடுத்து நண்பர்களுக்கு மெயில் அனுப்பி பீலா கட்டலாம்.

நீங்கள் பேசியதை சுலபமாக மற்றவருக்கு

AM 7:25 வழங்கியவர் ameerdeen

ஒருமுறை சென்று பாருங்கள்..
நண்பர்களே நீங்கள் பேசிய பேச்சை மற்றவர் தெரிந்துக்கொள்ள இதோ ஒரு வாய்ப்பு..
இதில் நீங்கள் பேசிய ஆடியோ செய்தியே மற்றவருக்கு அனுப்ப எளிய வசதி..
மிக சுலபம்..
இங்கே சுட்டுக..
http://www.freegabmail.com/Composer/Composer.html

மணி காட்டும் மனிதர்கள்....விந்தை

AM 7:24 வழங்கியவர் ameerdeen

http://billychasen.com/clock/

தமிழ் எம்பி3 பட்டிமன்றங்கள்.

AM 7:21 வழங்கியவர் ameerdeen

தமிழ்ப் பட்டி மன்றங்களின் பதிவுகள் - சாலமன் பாப்பையா - லியோனி இவர்களின் பங்களிப்பில் உருவானவை.
திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவைப் பட்டிமன்றங்கள்.சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்களின் ஒலிக்கோப்புகள் எம்பி3 டைப்பில்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்
1. 60 ஆண்டு கால சுதந்திரத்தில் நாம் அடைந்தது சாதனையா? சோதனையா?
2. 75 ஆண்டு கால திரைப்பட வரலாற்றில் நாம் கண்டது சோதனையா? சாதனையா?
3. சினிமா பெண்களைச் சிறுமைப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?
4. சினிமாவானது சமூகத்தைச் சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா?
5. கிராமமா? நகரமா? எது சிறந்தது?
கூட்டுக் குடித்தனமா? தனிக்குடித்தனமா?
6. குடும்பத்தின் மகிழ்ச்சிக்குக் காரணம் மகளா? மகனா?
7. நகைச்சுவையின் நோக்கம் சிரிக்கவைப்பதா? சிந்திக்க வைப்பதா?
8. எந்த மகளிரணி சந்தோசமான வாழ்வு வாழ்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்னர் சுதந்திரத்துக்கு பின்னர் ?
9. பணமா? குணமா?
10. பட்டுக்கோட்டையா? கண்ணதாசனா?
11. பழைய பாடலா? புதிய பாடலா?
12. சுதந்திரத்துக்குப் பின்னர் வளர்ச்சி கண்டோமா? வீழ்ச்சி கண்டோமா?
13. தமிழின் வீழ்ச்சிக்கு யார் பொறுப்பு - திரையுலகமா? பொதுமக்களா?
14. உறவுகளால் நெருக்கடியா? நிம்மதியா?
15. யார் சிறந்தவர்கள் - உழைப்பாளிகளா? படிப்பாளிகளா?
16. வீட்டுச்சூழலா? நாட்டுச்சூழலா? எது காரணம் - இளைஞர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு
17. எவனோ ஒருவன் - சத்தியராஜ் நடுவராக - பட்டி மன்றம்
 
கேட்டு மகிழுங்கள்.
http://www.4shared.com/dir/4663000/a3feb7c3/sharing.html

டொமைன் ரகசியம் .tk

AM 7:18 வழங்கியவர் ameerdeen

குறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா?
குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், "டாட் டிகே' மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
.
ஜூர்பியர் பணம் சம்பாதிக்க தேர்வு செய்திருக்கும் முறையை குறுக்கு வழி ஆனால் நேர்மையான குறுக்கு வழி என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. எதையுமே செய்யாமல் எந்தவிதமான உழைப்பும் இல்லாமல் அதிக முதலீடுமின்றி, சுலபமாக பணத்தை அல்லது பலன்களை அள்ளிக் குவிப்பது என்பதே குறுக்கு வழிக்கான இலக்கணமாக இருக்கிறது.
ஜூர்பியரும் இப்படித்தான் பணம் சம்பாதிக்கிறார். அவரது வர்த்தக திட்டம் பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம். "டாட் டிகே' எனும் முகவரியின் உரிமையை பதிவு செய்து கொண்டு, அந்த முகவரியில் கூடுதலாக பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முகவரிக்கும் அவர் வருவாயை தேடிக் கொண்டிருக்கிறார்.
இது எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள டொமைன் பெயர் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இன்டெர்நெட் முகவரிகள் பொதுவாக டொமைன் பெயர் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் பல ரகம் உண்டு. பரவலாக அறிந்த டாட் காம்ஐ தவிர டாட் ஓஆர்ஜி, டாட் நெட் போன்ற முகவரிகளும் இருக்கின்றன. இதைத் தவிர ஒவ்வொரு நாட்டின் பெயரை குறிக்கும் சுருக்கத்தை கொண்ட முகவரிகளும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு இந்திய முகவரிகள் என்றால் டாட் இன். பிரிட்டன் முகவரிகள் என்றால் டாட் யு.கே. ஆஸ்திரேலிய முகவரி என்றால் டாட் ஏ.யு. இவை சம்பந்தப்பட்ட நாடு களுக்கான பிரத்யேக இணைய முகவரிகள். டொமைன் பெயர்கள் வரலாற்றில் அவற்றில் முக்கியமானதாக கருதக் கூடியவற்றை முதலிலேயே பதிவு செய்து கொண்டு பின்னர் அதற்கு தொடர்புடையவர்கள் அதனை கேட்டு வந்தபோது பேரம் பேசி அதிக பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு ஏறக்குறைய தடை விதிக்கப்பட்டு விட்டது. இதை தவிர டொமைன் தயாரிப்புகள் மூலம் சம்பாதிக்க மற்றொரு சுவாரசியமான வழி இருக்கிறது. அது பிரபலமாக இருக்கக் கூடிய இணையதளங்கள் போல தோன்றக் கூடிய ஆனால் சிறிய வேறுபாட்டை கொண்ட முகவரிகளை பதிவு செய்து கொள்வது.
இணைய முகவரிகளை டைப் செய்யும்போது கை தவறி ஒரு எழுத்து கூடுதலாக அல்லது குறைவாக அல்லது மாறி அடித்து விடுவது உண்டல்லவா. அப்போதெல்லாம், நாம் சற்றும் எதிர்பாராத வகையில் அந்த எழுத்து தொடரக் கூடிய இணையதளம் எட்டிப் பார்த்து வியக்க வைக்கும். அந்த தளத்தில் அநேகமாக அதிக விவரங்கள் இருக்காது.
ஒரு சில தகவல்கள் பட்டியலிடப்பட்டு ஏதாவது இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். ஆனால் நிச்சயமாக கூகுல் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த விளம்பரங்களில்தான் விஷயமே இருக்கிறது. கூகுல் விளம்பரங்களில் க்ளிக் செய்யப்படும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு ஒரு சிறிய தொகை வருவாயாக கிடைக்கும்.
இந்த விளம்பர முறை கூகுலுக்கு வருவாயை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது. கூகுலுக்கு மட்டுமல்ல; அதனோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் இணையதளங் களுக்கும் இது சீரான வருவாயை தருகிறது. இத்தகைய விளம்பரங்களுக்கு உள்ளடக்கம் சார்ந்த விளம்பரம் என்று பெயர். அதாவது இணையப் பக்கத்தில் இடம் பெற்றிருப்பதற்கு பொருத்தமான
இணையதளங்களில் விளம்பர இணைப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த பக்கத்தை படிப்பவருக்கு ஆர்வமுட்டக் கூடிய வகையில் இருக்கும் என்பதால் மாமூலான, பொதுவான விளம்பரங் களை விட இவை க்ளிக் செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுவான விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடும். இந்த விளம்பரங்கள் அவற்றின் பொருத்தம் காரணமாக பயனுள்ள இணைப்புகள் போலவே கருதப்படும்.
எனவே முன்னணி தளங்கள் உட்பட பல தளங்கள் இந்த விளம்பரங்களை விரும்பி பயன்படுத்தி வருகின்றன. இந்த முறையையே மற்ற இணைய தளங்களும் புத்திசாலிதனமாக பயன்படுத்தி வருகின்றன.
முன்னணி தளங்களுக்கு இவை கூடுதல் வருவாய்க்கான வழியாக அமைந்திருக்கின்றன.
நிற்க! ஒரு சில புத்திசாலிகள் இத்தகைய விளம்பரங்களை இடம் பெற வைப்பதற்காக என்று பெயருக்கு என்று ஒரு இணைய தளத்தை நடத்தி அதன் மூலம் வருமானம் சம்பாதித்து வருகின்றனர். அநேகமாக இவை உள்ளடக்கம் ஏதும் இல்லாமல் வெறுமையாகவே இருக்கும். இந்த வெற்று இணைய தளங்களை தேடி இணையவாசிகளை வர செய்வதற்கு சுலபமான வழி இருக்கிறது. அதுதான் குறுக்கு வழி.
.
கூகுல் விளம்பரங்கள் மூலம் வருமானம் பெறுவதற்காக நடத்தப்படும் உள்ளடக்கமில்லா வெற்று தளங்களை நோக்கி இணையவாசிகளை வருகை தர வைப்பதற்காக என்று மிகவும் சுலபமான வழி இருக்கிறது. அது, சாமர்த்தியமாக இணையதள முகவரிகளை தேர்வு செய்து பதிவு செய்வது. உதாரணமாக ஒரு சில பெயர்களின் மூலமே, அது மகத்தானதாக இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தி விடலாம்.
அத்தகைய பெயர்களை யோசித்து இணையதள முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது பிரபலமான இணையதளத்திற்கு இணையான வேறு மாற்று முகவரிகளை பதிவு செய்து கொள்ள வேண்டும். தேடியந்திரங்களில் தேடும் போது அல்லது முகவரிகளை மாற்றி டைப் செய்யும் போது இந்த இணைய தளங்களுக்கு இணையவாசிகள் வருகை தர நேரிடும்.
அப்போது உள்ளடக்கம் இல்லாமல் அவர்கள் ஏமாந்து திரும்புவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை. அவர்களில் 10ல் ஒருவர் அல்லது நூறில் ஒருவர், ஏன் ஆயிரத்தில் ஒருவர் இந்த தளங்களில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்தால் போதும் வருவாய் வந்து விடும்.
இத்தகைய சாமர்த்திய முகவரிகள் பலவற்றை பதிவு செய்து கொண்டால் அதிக வருவாய் பார்க்கலாம்.
இப்படி பலர் செய்து வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் கோடீஸ்வர அதிபர்களாகி இருக்கின்றனர். அதிக உழைப்பின்றி பணம் சம்பாதிப்பதால் இவையும் குறுக்கு வழிதான். ஆனால் இவற்றில் எந்த சட்ட விரோதமான செயலும் இல்லை. மற்றவர்கள் பரவலாக அறிந்திராத நடைமுறையை புத்திசாலிதனமாக பயன்படுத்திக் கொள்ளும் செயல் மட்டுமே.
எனவே இவற்றை நேர்மையான குறுக்கு வழி என்று சொல்லலாம்.
டொமைன் பெயர் மூலம் சம்பாதிப்பதிலேயே மற்றொரு வழி இருக்கிறது. அது நாடுகளுக்கு உரிய டொமைன் உரிமை பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என்று தெரிந்தால் அதனை ஒட்டு மொத்தமாக பதிவு செய்து கொண்டு, அதன் பிறகு அதன் மூலம் வருவாயை பெருக்கிக் கொள்வது. அந்த நாடுகளுக்கான இணைய முகவரிகள் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு முறையும் அதன் மூலம் வருவாய் வந்து கொண்டிருக்கும்.
அதெப்படி ஒரு நாட்டுக்கான முகவரியின் உரிமையை பதிவு செய்யாமல் இருப்பார்கள். விஷயம் தெரிந்த உடனேயே பெரிய நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் போட்டிப் போட்டு கொண்டு பதிவு செய்து கொண்டு விடாதா? வாஸ்தவம்தான். முன்னணி நாடுகளின் பெயர் உரிமைகள் இப்படி உடனேயே பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற நாடுகளும் விழித்துக் கொண்டு பெயர் உரிமையை பதிவு செய்து கொண்டு விட்டன. ஆனால் பெயர் தெரியாத உலகம் அறியாத நாடுகள் சில இருக்கின்றன.
அவற்றுக்கு டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயம் தெரியவில்லை. அந்த பெயரில் டொமைன் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்ற விஷயம் மற்றவர்களுக்கும் தெரியவில்லை. உண்மையிலேயே இப்படி பல நாடுகள் இருக்கின்றன.
அத்தகைய அபூர்வ நாடுகளில் ஒன்றுக்கான டொமைன் பெயர் உரிமையை டச்சு தொழிலதிபர் ஜூஸ்ட் ஜூர்பியர் பதிவு செய்து வைத்துக் கொண்டார். இப்போது இந்த நாடுகளின் முகவரி யில் அமைக்கப்படும் ஒவ்வொரு இணையதள முகவரிக்கும் அவருக்கு வருவாய் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. ஆனால் இதனை அவர் முற்றிலும் நேர்மையான முறையில் பயன்படுத்தி வருகிறார்.
நேர்மையான முறையில் மட்டு மல்ல, பாராட்டக் கூடிய வகையிலும் தான். சொல்லப் போனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கே அவர் உதவுகிறார். அடிப்படை வசதிகள் அதிகமில்லாத ஒரு நாட்டுக்கு தகவல் தொடர்பு வசதியை அவர் தேடி தந்து தானும் வளமாகி தன்னை வளமாக்கிய நாட்டுக்கும் செல்வத்தை பெற்றுத் தந்து வருகிறார்.
உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
.
ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. காரணம் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? என்பது இணைய முகவரிகளை பதிவு செய்யும் மூல அமைப்பான ஐகானுக்கே தெரியவில்லை. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜூர்பியர் இல்லாத நாட்டின் பெயரை குறிப்பிட்டு கதை விடுகிறாரா என்று சந்தேகப்பட்டனர்.
பின்னர் ஜூர்பியர் அரும் பாடுபட்டு அந்த நாட்டின் இருப்பை நிரூபித்து அதற்கான உரிமையை பெற்றுக் கொண்டார். உண்மையில் 2001ம் ஆண்டு டொமைன் பெயர் உரிமையில் முதலீடு செய்ய அவர் முடிவு செய்த போது நான்கு நாட்டு முகவரிகளை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.
அவை பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், பிட்கைரன் மற்றும் டோகேலா. அதாவது இந்த நான்கு நாடுகளின் முகவரி உரிமையும் பதிவு செய்யப்படாமலேயே இருந்தது. பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு தைமூர் இரண்டுமே பிரச்சனை பூமிகளாக இருப்பதால் அந்நாடுகளின் முகவரிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது.
தினசரி வாழ்க்கையே செத்துப் பிழைக்கும் அனுபவமாக இருக்கும் போது டொமைன் பெயர் பற்றியெல்லாம் யோசிக்க யாருக்கு தோன்றும். இவற்றில் டோகேலா பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜூர்பியர் தீர்மானித்தார். பதிவு செய்து கொண்டதுமே டாட் டிகே எனும் பெயரில் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.
முன்னணி நிறுவனங்களை டிகே எனும் பதத்தோடு முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டமாக இது அமைந்தது. இந்த பெயரில் முகவரிகள் பதிவு செய்து கொள்ளப்படும் போது அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அந்த பெயரில் உள்ள தளங்களில் கூகுல் விளம்பரங்களை இடம் பெற செய்து அதன் மூலமும் வருமானத்தை பெற முடியும்.
இவ்வாறு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை அவர் டோகேலா நாட்டிற்கு வழங்கி விடுகிறார். அதுதான் டாட் டிகே திட்டத்தின் முக்கிய பகுதி. இந்த திட்டம் டோகேலா நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவுக் கூட்ட நாட்டில் அதிகம் போனால் 1500 பேர் இருப்பார்கள். இந்த நாட்டில் உள்ளவர்களை விட இந்த நாட்டிலிருந்து வெளியே போய் வசிக்கும் டோகேலாவாசிகள்தான் அதிகம்.
நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ளது இந்நாடு. அரசியல் ரீதியாக தனி நாடு அந்தஸ்து இல்லை. நியூசிலாந்துக்கு கீழ்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. நிதியுதவி உட்பட பல விஷயங் களுக்கு இந்நாடு நியூசிலாந்தைத் தான் நம்பி இருக்கிறது. 1994 வரை இந்நாடு தகவல் தொடர்புக்கு ரேடியோ தொலைபேசித்தான் நம்பி இருந்தது. அதன் பிறகு செயற்கைக் கோள் தொலைபேசிக்கு மாறியது. ஆனால் டாட் டிகே திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அந்நாட்டில் இன்டெர்நெட் தொலைபேசி வசதி சாத்தியமானது.
அதற்கு முன்பு இந்நாட்டில் மொத்தமே 12 கம்ப்யூட்டர்கள்தான் இருந்தன. ஆனால் டாட் டிகே வருவாய் மூலம் இன்டெர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இணையதளங்களின் மூலம் பாடல்களை டவுன்லோடு செய்வது, மை ஸ்பேஸ் போன்ற தளங்களை பார்ப்பது ஆகிய செயல் களிலும் ஈடுபட தொடங்கினர்.
இன்று இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தில் 10 சதவீத நிதி டாட் டிகே திட்டத்தின் மூலம் கிடைத்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் எனும் நோக்கத்தை இந்த திட்டம் நிறைவேற்றி வருவதாக டோகேலா நாட்டை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். இதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் பஃகா பேட்டாய் என்கின்றனர். அதாவது அவர்கள் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
இப்படியாக ஜூர்பியர் டாட் டிகே முகவரிகளை பதிவு செய்வதன் மூலமே வருவாயை தேடிக் கொண்டு வருகிறார். இது குறுக்கு வழிதான். ஆனால் ஒரு நாட்டுக்கே உதவும் நியாயமான குறுக்கு வழி.

உலக சாதனை உங்கள் கையில்...

AM 7:17 வழங்கியவர் ameerdeen

உலக சாதனைகளை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டுமல்ல, உலக சாதனையையே உங்களால் தீர்மானிக்க முடியும் என்று சொன் னால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் அற்புதமான தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உறுப்பினராகி உலக சாதனைகளை நீங்களே முடிவு செய்யலாம்.
உலக சாதனை என்றவுடன் கின்னஸ் புத்தகம்தான் நினை வுக்கு வரும். கின்னஸ் புத்தகம் பல்வேறு பிரிவுகளில் உலக சாதனைகளை அங்கீகரித்து அது பற்றி விவரங்களை வெளியிட்டு வருகிறது.
.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது அத்தனை எளிதல்ல. எல்லாவிதங்களிலும் சாதனை பற்றிய விவரங்களை உறுதி செய்து கொண்டே கின்னஸ் சாதனை முயற்சிகளை அங்கீகரிக்கிறது. நீங்கள் கின்னஸ் புத்தகத்தின் அபிமானியாக இருக்கலாம். அதில் இடம் பெற்றுள்ள அநேக சாதனை களை விரும்பி படித்து இருக்கலாம்.
இந்த அளவும் கூட கின்னஸ் சாதனை புத்தகத்தில் புதிதாக இடம் பெறும் சாதனைகள் உலக ளவில் பரவலான கவனத்தை பெறுகின்றன. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான சாதனை முயற்சி களும், பத்திரிகை மற்றும் நாளி தழ்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சாதனைகளுக்கு அப்படியொரு மதிப்பு மற்றும் வரவேற்பு இருக்கிறது.
ஆனால் பல சாதனைகள் குறித்து உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். இந்த நிலை யில்தான் உலக சாதனைகளை உங்கள் கைகளுக்கே கொண்டு வரும் வகையில் ரிக்கார்டு கப் டாட்காம் தளம் http://www.recordcup.com
தொடங்கப் பட்டுள்ளது.
இந்த தளத்தில் சாதனைகளை தீர்மானிக்க நீங்கள் சாதனையாள ராக இருக்க வேண்டும் என்ற அவசிய மில்லை. ஆனால் சாதனை என்று நினைக்கும் விஷயத்தை இங்கே அங்கீகாரம் பெற வைக்கலாம். அதாவது உலக சாதனையை நீங்களே தீர்மானிக்க முடியும்.
அதெப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் இன் டெர் நெட்டின் தனித்தன்மை.
தற்போது இன்டெர்நெட் உலகில் டிக் டாட் காம் இணைய தளம் மிகவும் பிரபலமாக இருப் பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இந்த டிக் டாட் காம் இன்டெர்நெட்டில் புதிய போக்கை ஏற்படுத்திய முன்னோடி தளம்.
எந்த வகையான செய்திகள் முன்னிலை பெறுகின்றன என்பதை தீர்மானிக்கும் ஆற்றலை வாசகர்கள் கையிலேயே கொண்டு வந்து தந்த தளம் இது. செய்தி தளங்கள் முன் வைக்கும் செய்திகளை அப்படியே படிக் காமல், எந்த செய்தியை படிப்பது என்பதை இணையவாசிகளே முடிவு செய்யும் வகையில் இந்த தளம் செயல்பட்டு வருகிறது.
இந்த தளத்தின் செயல்பாட்டு முறை மிகவும் எளிதானது. இணைய வாசிகள் தாங்கள் முக்கியமாக கருதும் செய்தியை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இணையவாசிகள் அந்த செய்தி யின் முக்கியத்துவம் குறித்து வாக்களிப்பார்கள்.
அதிக வாக்கு பெறும் செய்தி தளத்தின் முகப்புப் பக்கத்தில் இடம் பெறும். வாக்குகளை பெறத் தவறும் செய்தி பின்னுக்கு தள்ளப் பட்டு விடும்.
இவ்விதமாக இணையவாசி களே ஒரு சமூகமாக இணைந்து அவர்கள் தீர்மானிக்கும் செய்தி களே முன் வைக்கப்படுகிறது. இந்த தளம், செய்திகள் வெளி யிடப்படும் விதத்தில் புரட்சிகர மான மாற்றத்தை ஏற்படுத்தியி ருப்பதாக கருதப்படுகிறது. இந்த பாணியை பின்பற்றி பல் வேறு தளங்கள் உருவாகியுள்ளன. இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருப்பது தான் ரிக்கார்டு கப் டாட் காம்.
இணையவாசிகள் தாங்கள் உலக சாதனை என்று கருதும் விஷயத்தை இந்த தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான வீடியோ ஆதாரத்தையும் இடம் பெற செய்ய வேண்டும்.
பின்னர் மற்ற இணையவாசிகள் அந்த சாதனை மீது வாக்களிப் பார்கள். போட்டி சாதனை இருந் தால் அதனையும் சமர்ப்பிப்பார் கள். எந்த சாதனை வெற்றி பெறு கிறதோ அது உலக சாதனையாக அங்கீகரிக் கப்படும்.
இவ்விதமாக யார் வேண்டுமானாலும் உலக சாதனையை சமர்ப்பிக்கலாம். தற்போது உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர் யார்? உயரமான கட்டிடம் எது? அழகான வாரிசு யார் என்பது போன்ற போட்டிகள் இந்த தளத்தில் அரங்கேறி வருகிறது.
உலக சாதனையை முற்றிலும் ஜனநாயகமயமாக்கி இருப்பதாக இந்த தளத்தை பாராட்டலாம்.
சுவாரசியமாக பொழுதை கழிக்க விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று இங்குள்ள உலக சாதனைகளையெல்லாம் படித்து, பார்த்து மகிழலாம்.

குப்பை மெயில்கள் - குறைக்கும் வழி

AM 7:16 வழங்கியவர் ameerdeen

1.நமது ஈமெயில் முகவரிகளை பொதுவான இடங்களில் உபயோகிப்பதை குறைக்க வேண்டும்.
உதாரணமாக செய்திகள் வெளியிடும் போது(News Group) அல்லது உரையாடல் செய்யும் போது,மேலும் சில வலைத்தளங்களை பார்வையிடும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
2.சில சமயங்களில் நமது ஈமெயில்களை பொதுவான இணையதளங்களில் கொடுக்க வேண்டாம்.
3.ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஈமெயில் முகவரிகளை பயன் படுத்தலாம்.ஒரு ஈமெயிலை தனிப்பட்ட விஷயத்திற்கும்,மற்றவை அலுவல விசயங்களை பொறுத்து பயன் படுத்தலாம்.
4.ஈமெயில்களை பொதுவான பெயர்களில் உருவாக்கமால்,தனித்தன்மையான பெயரில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
5.ஈமெயில் வடிகட்டி(filter) பயன்படுத்தலாம்.அதன் முலம் நமக்கு வரும் மெயிலகளை ஆராய்ந்து,தேவையற்றதை அழித்து மற்றவை நம்முடைய மெயில் பாக்ஸ்க்கு அனுப்பும்.பில்டர் க்கான சாப்ட்வேர்கள் சந்தையில் உள்ளன.
இதன் முலம் குப்பை மெயிலகளை பெருமளவில் குறைக்கலாம்.

வாங்க! தாஜ்மஹால சுத்திப்பார்க்கலாம்......

AM 7:14 வழங்கியவர் ameerdeen

http://www.msnbc.msn.com/id/6065351

கூகிள் பற்றி சுவையான தகவல்கள்

AM 7:14 வழங்கியவர் ameerdeen


ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.
""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்த࠮?ன் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''
இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?
கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

இலவச வலைப்பூ தளங்கள்

AM 7:10 வழங்கியவர் ameerdeen

http://www.blogger.com
http://www.sulekha.com
http://www.wordpress.com
http://www.blogsome.com
http://www.sify.com
http://www.rediffblogs.com
http://www.blogeasy.com
http://www.toadfire.com
http://www.clearblogs.com
http://www.blogstream.com
http://www.msn.com
http://www.yahoo.com
http://www.myspace.com
http://www.livejournal.com/
http://www.xanga.com
http://www.problogs.com
http://www.blog-city.com
http://www.bravenet.com
http://www.tblog.com
http://www.tripod.com

இலவச மின் அஞ்சல் தளங்கள்

AM 7:09 வழங்கியவர் ameerdeen


இலவச மின் அஞ்சல் தளங்கள்
--------------------------------------------------------------------------------
www.hotmail.com
www.gmail.com
www.yahoo.com
www.graffiti.net
www.inbox.com
www.30gigs.com
www.gawab.com
www.rediff.com
www.sify.com
www.indiatimes.com
www.123india.com
www.aol.com
www.bluebottle.com
www.canada.com
www.hushmail.com
மேலும் வரும்.

இலவச வெப் ஹோஸ்டிங் செய்ய

PM 7:02 வழங்கியவர் ameerdeen


www.googlepages.com
www.tripod.com
www.fortunecity.com
www.geocities.com
 
உங்களிடம் ஒரு டொமைன் இருந்தால் இந்த இணையதளங்களிலிருந்து இடத்தை இலவசமாக பெற்று உங்கள் இணைய தளத்தை துவக்கலாம்.

முற்றிலும் இலவச டொமைன் வசதி

PM 7:00 வழங்கியவர் ameerdeen

உங்கள் பெயரில் இலவசமாக டொமைன் பெயர் வேண்டுமா. இங்கு செல்லுங்கள். பெற்ற பிறகு தினமும் குறைந்தது 5 பேர் உங்கள் வலைதளத்திற்கு வராவிட்டால் இந்த இலவச வசதியை திரும்பி பெற்றுக் கொள்வார்கள்.
http://www.dot.tk

வீடியோ எடிட்டிங் மென்பொருள்

PM 6:55 வழங்கியவர் ameerdeen


Avidemux என்ற இந்த இலவச மென்பொருள் வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க, வடிவங்கள் மாற்ற பயன்படும். இது கீழே கண்ட அநேக வடிவங்களில் உள்ள வீடியோவுடன் ஒத்திசையும்.
DVD, VOB, AVI, DivX, XviD, WMV, MPG, MP4, AVI, MOV, MKV, DV, FLV.
ஒரிஜினலாக புரோகிரம் உள்ள தளம்
http://avidemux.sourceforge.net/download.html
Mirror - direct link ரைட் கிளிக் செய்து சேவ் அஸ் என்று கொடுத்தல் போதும்
http://www.videohelp.com/download/av....4.4_win32.exe

பார்க்க கூடாத வெப்தளங்களை நம் கம்ப்யூட்டரில் தடைசெய்யமுடியுமா?

PM 6:54 வழங்கியவர் ameerdeen

உங்கள் iexplore-ல்
tools-->Internet Options---> security ---> restricted sites
இங்கே சென்று..
எந்த தளங்களை.. இந்த மாதிரியான விடயங்களை அவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்களோ அவற்றின் key-word-களை எ.டுவாக..
"mail" என்றுக் கொடுத்துவிட்டால் அவர்கள் எந்த மெயில் தளங்களையும் பார்க்க இயலாது.. "game" என்றுக் கொடுத்துவிட்டால் எந்த game தளங்களையும் பார்க்க இயலாது..
எல்லா தளங்களையும் கண்டு ப்ளாக் செய்வதைவிட இந்த மாதிரி keywork-கள் கொண்டு ப்ளாக் செய்வது எளிது..

துபாய் குறித்து அறிய உதவும் இணையத்தளம்

AM 7:32 வழங்கியவர் ameerdeen

http://www.dubai.ae/ எனும் இணையத்தளம் துபாய் குறித்து பல்வேறு தகவல்களை அறிய உதவுகிறது.
இவ்விணையத்தளத்தில் துபாய் குறித்த தகவல்கள், விசா பெறும் வழிமுறைகள், மின் இணைப்பு பெற இணையவழி விண்ணப்பம், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீட்டுவசதித்துறை, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சேவைகளை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையம் வழி சேவைகளைப் பொதுமக்கள் உபயோகித்து தங்களது நேரத்தை சேமிக்க துபாய் அரசு இத்தகைய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இளைய தலைமுறையினரைக் கவரும் ஷேக் முஹம்மத் இணையத்தளம்

AM 7:32 வழங்கியவர் ameerdeen

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், துபாய் ஆட்சியாளர் என முப்பெரும் பொறுப்புகளை வகித்து வருபவர் மேன்மை மிகு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம். புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள www.sheikhmohammed.co.ae எனும் இணையத்தளம் இளைய தலைமுறையினரை பெருமளவு கவர்ந்துள்ளது.



இவ்விணையத்தளத்தில் ஷேக் முஹம்மத் அவர்கள் கலந்து கொண்ட செய்திகள், சிறப்புக்குறிப்புகள், வரலாறு, கவிதை, படிப்பு, விருதுகள், வரலாறு, சுற்றுலா, ஊடகம், வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. இணையத்தளத்தை பார்வையிடுவோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷேக் முஹம்மத் சிறந்த ஆட்சியாளராக மட்டுமல்லாது ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகளும் இவ்விணையத்தளத்தில் காணப்படுகின்றன.

துபாயில் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

AM 7:31 வழங்கியவர் ameerdeen

துபாயில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
http://www.labourcomplaints.ae/
புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119 மேலும் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

PM 7:00 வழங்கியவர் ameerdeen

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

செய்முறை விளக்கம்:

1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)

3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.


நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

blogger-ல் Navbar-ஐ நீக்குவது?

PM 6:48 வழங்கியவர் ameerdeen

1) உங்கள் blogger account-டில் login செய்யவும்.
2) Dashboard-இல் நுழைந்த பின் "Layout"-ஐ கிளிக் செய்யவும்.
3) அதில் "Edit HTML"-ஐ கிளிக் செய்யவும்.
4) அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டதைப் போல இருக்கும்.

[CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name: Rounders
Designer: Douglas Bowman
URL: www.stopdesign.com
Date: 27 Feb 2004
Updated by: Blogger Team
----------------------------------------------- */

இந்த வரிக்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்ட வரிகளை சேர்த்துவிடவும்.


#navbar-iframe {
display: none !important;
}

அதன் பிறகு இருக்கும் வரிகளை அப்படியே விட்டுவிடவும்.

/* Variable definitions
====================


...

மென் தொலைபேசி (softphone)

AM 8:17 வழங்கியவர் ameerdeen



மென் தொலைபேசி ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் இரு இடங்களில் இருக்கும் மனிதர்கள் தொலைபேசிக் கருவி (வன்பொருள்) இல்லாமல் உரையாடிக் கொள்ளலாம். இதற்கு VoIP தொழில்நுட்பம் பயன்படுகிறது.

ஒரு தொலைபேசிக் கருவி என்ன வேலை செய்யுமோ, அதே வேலையை கணினியில் இருக்கும் ஒரு மென்பொருள் செய்துவிடுகிறது. ஒரு கணினியில் இருந்து உலகின் வேறொரு இடத்தில் இருக்கும் கணினி / தொலைபேசி / அலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கவோ - அழைப்புகள் பெறவோ சாஃப்ட் ஃபோன் உதவுகிறது.

கீழே முக்கியமான அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய சாஃப்ட் போன் மென்பொருள்களைக் கொடுத்துள்ளேன்.


http://www.skype.com/

http://www.sipphone.com/

http://www.voipstunt.com/

http://www.voipstunt.com/

http://www.jajah.com/

http://www.talkster.com/

http://www.yeigo.com/

http://www.fring.com/

http://www.apple.com/macosx/features/ichat.html

http://www.icall.com/

http://counterpath.com/index.php?menu=Products&smenu=xlite

http://www.talkety.com/

http://www.raketu.com/en/index.php

http://www.nimbuzz.com/

http://www.jaxtr.com/user/index.jsp

http://www.wengo.fr/index.php

நீளமான இணைய முகவரிகளைச் சுருக்குவது

AM 8:13 வழங்கியவர் ameerdeen

நம் நண்பர்கள் அனைவருமே இணையத்தளமோ (web site), வலைப்பதிவோ (blog) வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இணைய முகவரி (URL ) கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பதிவுகளுக்கும் தனித்தனி முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பதிவின் முகவரியைத் தொலைபேசியின் ஊடாக வேறு ஒரு நண்பருக்குத் தெரிவிக்க முயற்சித்தால் தகவல் இழப்புதான் நிகழும்.

ஏனெனில் பதிவின் முகவரி (URL for post address) மிக நீளமானதாகவும், தொலைபேசியின் அடுத்த முனையில் இருப்பவருக்குச் சிரமம் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

தொலைபேசி வாயிலாக ஒரு குறிப்பிட்ட பதிவின் முகவரியை எழுத்துப்பிழையில்லாமல் தெரிவிக்க இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.


குறிப்பிட்ட சில புக்மார்க் திரட்டிகளில் (book mark aggregators) ஏதேனும் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட URL ஐ நிராகரித்திருப்பார்கள். அந்த URL ஐ அவர்களது Filter நுட்பம் வடிகட்டிவிடும்.

இந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட URL ஐ சுருக்கி வேறோரு URL ஆக மாற்றி அதை bookmark திரட்டிகளில் submit செய்யலாம். இது ஒரு காரணம். இது போல பல காரணங்கள்.

மிக நீளமான இணைய முகவரிக்குப் பதிலாக சிறிய முகவரியைப் பயன்படுத்தலாம். இதற்கு URL Redirection என்று பெயர்.

இந்தச் சேவையை வழங்குவதற்காக கீழ்க்கண்ட தளங்கள் உள்ளன.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2805

http://metamark.net/

http://notlong.com/

http://xaddr.com/

http://www.snipurl.com/site/index

http://doiop.com/

http://memurl.com/

http://shorl.com/

http://qurlyq.com/

http://is.gd/

http://traceurl.com/index.html?locale=en#t0

http://tinyurl.com

CD ரைட் பண்ணுவதை எப்படி வேகபடுத்துவது?

PM 3:02 வழங்கியவர் ameerdeen

CD Drive, CPU வின் தலையீடில்லாமல் மெமறியை எழுதவோ வாசிக்கவோ முடிந்தால் CD சுடுவது வேகமாக நடைபெறும். தவிர வேகம் என்பது CD டிறைவின் வேக பெறுமதியையும் பொறுத்தது. இதை Xல் கணக்கிடுவார்கள். X என்பது ஆரம்பத்தில் வெளிவந்த CD Rom டிறைவின் வாசிக்கும் வேகமாகிய 150 கி.பைட்ஸ்/செ. ஆகும். இப்போது வெளிவருகின்ற CD Rom டிறைவுகளின் உச்ச வேகம் 72X கொண்டவைகளாகவுள்ளன. அதாவது 72x150 கி.பை/செ என்பதாகும். சில CD - R டிறைவுகளின் முகப்பில் 48X/24X என காணப்படும். இதில் முதலாவது வாசிக்கும் வேகம். இரண்டாவது எழுதும் வேகமுமாகும். இன்னும் சிலவற்றில் 48X/24X/12X என காணப்படும். இதில் 12X எனப்படுவது சிடியை அழித்து திருப்பி எழுதும் வேகமாகும். இம்மூன்றில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் கூடிய பெறுமதியுடைய எண் வாசிக்கும் வேகத்தையும், அடுத்த பெறுமதியுடைய எண் எழுதும் வேகத்தையும், குறைந்த பெறுமதியுடைய எண் அழித்து எழுதும் வேகத்தையும் காட்டுகின்றது என்பதாகும்.

ஆரம்பத்தில் பாடல்களை பதிவு செய்ய ஓடியோ சீடி (Audio CD-Rom) தொழில்நுட்பம் 1980ல் உருவானது. பின்பு இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்பியூட்டர் உலகில் விலைகூடிய இயந்திரங்களைக்கொண்டு Data வை பதிவு செய்தார்கள். அடுத்து சாதாரண பாவனையாளருக்காக மலிவு விலையில் வாசிக்க மாத்திரம் உதவும் CD-Rom drive உருவானது. பின்பு மென்தட்டு போல எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் 1990ல் ஏற்பட்டதே CD-R drive. இதை மேலும் மேம்படுத்தி CD-RW drive வை உருவாக்கினார்கள். இந்த drive கள் ஒரு கண்ணாடியையும் லேசர் கதிரையும் பாவித்தே டிஸ்க் ஐ வாசிக்கின்றன.

CD -Compact Disc- 12 cm விட்டமுடையதாகும். 650-700 மில்லியன் பைட்ஸ் வரை கொள்ளக்கூடியது. டிஸ்க் களில் CD-R, CD-RW, Music CD-R என மூன்று வகையுண்டு.

இப்போது CD Drive CPU வின் தலையீடில்லாமல் எழுத, வாசிக்க வேண்டிய செற்றிங் என்னவென பார்ப்போம். இச்செயலை DMA - Direct Memory Access - என்பார்கள். "My Computer" ஐ வலது கிளிக் செய்து பின் Properties, Hardware Tab, Device Manager, இவைகளை கிளிக் செய்து, IDE ATA/ATAPI என்பதன் முன்னுள்ள ப்ளஸ் அடையாளத்தை கிளிக் செய்து, Primery IDE Chl என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதில் கிளிக் செய்து, Advance Settings என்பதை கிளிக்பண்ணி, Transfer Mode என்ற பெட்டியில் "DMA if available" என்றிருந்தால் அப்படியே விட்டுவிடவும். "PIO only" என்றிருந்தால் பெட்டியின் வலபக்க முக்கோணத்தை கிளிக் செய்து "DMA if available" என்பதை தேர்வு செய்யவும். கம்பியூட்டரை reboot பண்ணவும். Pio-Programmable Input/output- என்பது பழைய மிகவும் மெதுவான தரவு பரிமாற்றம் செய்யும் முறையாகும்

CD - Rom என்பது Compact Disc - Read Only Memory
CD - R என்பது Compact Disc - Recordable
CD - RW என்பது Compact Disv - Rewriteable
DVD - என்பது Digital Versatile Disc

CD யில் Data வை பதிவு செய்து (மிக நுண்ணிய குழி 1 எனவும், குழி அல்லாத மேடு 0 என பைனறியில் பதிவு செய்தல்) விட்டு லேசர் கதிரால் சூடேற்றி கடினப்படுத்துவதால் "CD Burning" எனப்படுகின்றது. அழித்து எழுதும்போது இப்பகுதி மீண்டும் மென்மையாக்கப்பட்டு, எழுதப்பட்டு, மீண்டும் சூடேற்றப்படுகிறது.

Hub,Switch,Router என்றால் என்ன?

PM 3:01 வழங்கியவர் ameerdeen

Hub என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.

Switch என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.

Router என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.

தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.

எளிதாக நாம் விரும்புவதை xp யில் திறக்க

PM 2:57 வழங்கியவர் ameerdeen

நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.

நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.

இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்

Error ரிப்போர்ட் ஐ செயல் இழக்க செய்ய.

PM 1:54 வழங்கியவர் ameerdeen

காரணம் என்ன என்று என்னால் சரியாக சொல்லத தெரியாது. அல்லது காரணம் பலவாறாக இருக்கலாம். னால் தவறு நடந்துவிட்டது. இந்த தவற்றை மைக்கிறோசொவ்ற்றிக்கு அறிவிக்கவா? என கேட்டு செய்தி பெட்டி திரையில் தோன்றுவது சகஜம். இந்த செய்தி நண்பர்கள் கொடுத்த விலைக்குவாங்காத இயங்குதள பிரதியை தங்கள் கம்பியூட்டரில் நிறுவியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அந்த பிரதி வைத்திருப்பவர்களின் IE திரையில் Help மெனுவை கிளிக்பண்ண Is your copy of windows legal? என்ற செய்தியும் சில வேளைகளில் தோன்றி அதிர்ச்சி கொடுப்பதுண்டு. இந்த தொல்லையை நிறுத்தலாம் எப்படி?

Start --> Control Panel -->Double click System --> Advanced Tab --> Error Reporting --> click to disable Error Repoting.

இது எக்ஸ்பி க்கு பொருந்தும். இனிமேல் இந்த செய்தி வரவே வராது

Proxy Server என்பது என்ன?

PM 1:48 வழங்கியவர் ameerdeen

இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம்.
Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர்
அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும்.
உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும்.
X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள
கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது.
Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத
போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .

குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்?

AM 11:28 வழங்கியவர் ameerdeen

பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.

சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.

பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.

பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல்

AM 11:27 வழங்கியவர் ameerdeen

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் 10:10 என்று காட்டுவது ஏன்?

AM 11:25 வழங்கியவர் ameerdeen



உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்!

அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என அமெரிக்கர்கள் எண்ணினர். அதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கின

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் கார்

AM 10:27 வழங்கியவர் ameerdeen

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் கார்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரிலேயே கண்டுகளியுங்கள்

கார் விபத்துகளை தடுக்க

AM 9:44 வழங்கியவர் ameerdeen

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரை எரி பொருளாக கொண்டு ஓடும் கார்

AM 9:44 வழங்கியவர் ameerdeen

நீரை எரி பொருளாக கொண்டு ஓடும் கார்

நனைந்தபடி செல்போனில் பேசலாம்

AM 9:42 வழங்கியவர் ameerdeen

இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது.

இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் நீர் புகுந்து சர்க்யூட்களை சேதப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு விடும். நீர் தடுப்பு பூச்சு பூசப்பட்ட செல்போன், மழை, பனி, தவறுதலாக நீரில் விழுதல், வியர்வை ஆகியவற்றால் பாதிக்கப்படாது.

செயற்கைத் தோல்

AM 9:41 வழங்கியவர் ameerdeen

பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொள் ளும். நோயாளியின் உணர்வு நரம்புகளுடன், நானோ டியூப்கள் இணைக்கப்படும் போது, உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்லவும், மூளையின் கட்டளையை ஏற்கும் வகையிலும், செயற்கைத் தோல் செயல்படும்.

தற்போது பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தோல், பரிசோதனையில் முழுமையான வெற்றியடைந்துள்ளது. "சாதாரணமாக மனிதர்களின் உடலில் உள்ள தோலைவிட, இது கூடுதல் உணர்ச்சிகளை அறியக்கூடியது' என்கிறார் இதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி ஜான் சிம்சன்.

MRI கருவியை பற்றி

AM 9:40 வழங்கியவர் ameerdeen

உடலுக்குள் எந்த கருவியையும் நுழைக்காமல் உள்ளுறுப்புகளை துல்லியமாகப் படம் பிடிக்கும் இம்முறை மருத்துவ உலகில் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் MRI கருவிகளைக் கொண்டு ஆண்டுதோறும் 6 கோடி படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். நூறாண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்ட X-கதிர் படப்பிடிப்பு (X-ray radiography) முறைக்குப் பின் மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட படப்பிடிப்பு முறைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது MRI. காந்த ஒத்திசைவு (magnetic resonance) என்ற அறிவியல் கோட்பாடு 1946-லேயே கண்டு பிடிக்கப்பட்டாலும், காந்த ஒத்திசைவு படப்பிடிப்பு என்ற மருத்துவ சாதனத்தின் அடிப்படைக்கான ஆராய்ச்சி 1969ல்-தான் ஆரம்பித்தது.


காந்த ஒத்திசைவு என்பது சில தனிமங்களின் (elements) அணுக்கருவின் (nucleus) காந்தத்தன்மையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இயற்பியல் கோட்பாடு. உயிர்கள் அனைத்திலும் பரந்து கிடக்கும் தண்ணிரின் முக்கிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிகமாக ஆராயப்பட்டவையாகும். 1952ல் இயற்பியல் நோபெல் விருது வாங்கிய பெலிக்ஸ் ப்ளாக் (Felix Bloch) மற்றும் எட்வர்ட் பர்செல் (Edward Purcell) என்ற அமெரிக்க விஞ்ஞானிகள் அணுக்களின் காந்தத்தன்மையைப் பயன்படுத்தி, முதல் காந்த ஒத்திசைவு சோதனையை நடத்தி ஒரு புதிய வேதியல் ஆராய்ச்சிக் கருவியைக் கண்டுபிடித்தனர்.


பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளிக்கூடங்களில் நடத்திய சோதனையில் அறிந்தது, ஒரு காந்தத் துண்டை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வடக்கு தெற்காக திரும்பி நிற்கும் என்பது. இதற்குக் காரணம், பூமியின் காந்தப்புலமே என்பதை அறிவோம். பூமியின் காந்தசக்திக்குப் புறம்பாக அக்காந்தத்துண்டை நகர்த்த வேண்டுமானால் நாம் சிறிது ஆற்றலைச் செலுத்த வேண்டும். தண்ணீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் இது போல காந்தத்துண்டுக்களாக கொள்ளலாம். தண்ணீரை ஒரு பெரிய மின்காந்தப் புலத்தில் வைத்தோமானால், ஹைட்ரஜன் அணுக்களும், அம்மின்காந்தப்புலத்தின் வடக்கு தெற்குத்திசைகளை நோக்கி திரும்பி நிற்கின்றன. அவற்றை மாற்றியமைக்க வேண்டுமெனில் ரேடியோ அலைகளை (Radiowaves) ஆற்றலாகப் பாய்ச்ச வேண்டும். ரேடியோ அலைகளின் அலை நீளம் (wavelength) அல்லது அதிர்வெண் (frequency) மற்றும் வீச்சு (amplititude) போன்றவை அணுக்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் அணுக்களின் காந்தத்தன்மையும் ரேடியோ அலைகளும் ஒத்திசைந்தால் தான், ரேடியோ அலைகளின் ஆற்றலை உட்கொண்டு, அணுக்கள் மின்காந்தப்புலத்தை எதிர்த்து நிற்கும். இந்தக் காந்த ஒத்திசைவின் அடிப்படைத் தத்துவத்தை வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் முழுக்கப் பயன்படுத்தி மூலக்கூறு அமைப்பை (molecular structure) பலபத்து வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர்.


இந்த காந்த ஒத்திசைவுக் கோட்பாட்டை மேலும் ஒருபடி எடுத்துச் செல்பவையே காந்த ஒத்திசைவு பிம்பங்கள் (magnetic resonance images). மேலே சொல்லப்பட்ட மின்காந்தம் முழுப்பரப்பளவிலும் ஒரே சீராக (homogenous) இருக்குமாயின், அப்பரப்பளவுக்குள் வைக்கப்பட்ட ஒரு பாத்திரத்திலோ அல்லது ஒரு உடலுறுப்பிலோ உள்ள தண்ணீர் ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக ரேடியோ அலைகளுடன் ஒத்திசையும். ஆனால் மின்காந்தப் புலத்தை அப்பரப்பளவில் நீள வாக்கிலோ அல்லது அகல வாக்கிலோ படிப்படியாக அதிகரித்துக் கொண்டே (magnetic field gradient) போனால், ஹைட்ரஜன் அணுக்களின் காந்த ஒத்திசைவு இடத்துக்கு தகுந்தவாறு மாறியமையும். இதன் மூலம் அந்த பரப்பளவில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களை ரேடியோ அலைகளை வைத்து படம் பிடிப்பது (imaging) சாத்தியமாகும். மேலும் ஒரு உடலுறுப்பில் ஏதாவது கட்டி அல்லது நோய் தாக்கியிருந்தால் அந்தப் பகுதியில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள், மற்ற பகுதிகளில் உள்ள அணுக்களை விட மாறுபட்ட அலை நீளத்தில் ஒத்திசைவு அடையும் என்பதால், MRI படங்களில் அவற்றைக்காண முடியும்.


மருத்துவ நோபெல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டத் துறையான காந்த ஒத்திசைவு பிம்பமுறை (Magnetic Resonace Imaging or MRI) கண்டுபிடிப்புக்குக் காரணமானவர்கள் யார் என்று முடிவு செய்வதில் நோபெல் தேர்வுக்குழு பல வருடங்கள் திணறிக்கொண்டிருந்தது. கடைசியில் பால் லாட்டர்பருக்கும், சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டுக்கும் பரிசைப் பகிர்ந்தளித்தது. ஆனால் இதைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வரும் மற்றொரு விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான் (Raymond Damadian), தனக்கும் இந்த நோபெல் பரிசு அளிக்கபட்டிருக்க வேண்டும் என்று பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் 290,000 டாலர்கள் செலவில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டார். இவர் 1988ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த தேசிய தொழில்நுட்ப விருதை பால் லாட்டர்பருடன் பகிர்ந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதும் பல வித சர்ச்சைகளுக்குப் பின்னால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே இருவருக்கும் MRI கண்டு பிடிப்புக்கான விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. நேபெல் பரிசு விதிகளில் ஒரு துறையில் மூன்று பேர்கள் வரை பரிசு அளிக்கப்படலாம் என்றிருந்தபோதிலும் தன்னை வேண்டுமென்றே விலக்கிவிட்டு இருவரை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கடுங்கோபத்துக்கு உள்ளாகியுள்ளார் டமாடியான்.

காந்த ஒத்திசைவு பிம்பமுறை (MRI) தொழில் நுட்பத்தை முதலில் கண்டு பிடித்து பிரபல அறிவியல் பத்திரிகையான Nature-ல் 1973-ஆம் ஆண்டு வெளியிட்டார் அப்பொழுது நியுயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பால் லாட்டர்பர். இருப்பினும், அவர் இந்த கோணத்தில் ஆராய்ச்சி செய்யத் தூண்டுகோலாக அமைந்தது என்னவோ, அதே பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மருத்துவ விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான். அவர் 1969லிருந்தே புற்று நோய் தாக்கிய உறுப்புக்களை காந்த ஒத்திசைவுக் கருவிகளை வைத்துப் படம் எடுக்கும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். ரேமண்ட் டமாடியான், அவருடைய ஆரம்பகால ஆராய்ச்சி முடிவுகளை மற்றொரு பிரபல அறிவியல் பத்திரிகையான Science-ல் 1971-ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.

லாட்டர்பரின் தொழில் நுட்பம் தான் இன்றுள்ள MRI கருவிகளின் அடிப்படையாக அமைந்தாலும், டமாடியான்தான் மருத்துவத்தில் படம் பிடிக்கும் கருவியாக காந்த ஒத்திசைவு பிம்பமுறையை பயன்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் செயல் திட்டத்திலும் இறங்கினார். அவரே MRI கருவிகளைத் தயாரிக்கும் FONAR என்ற முதல் தொழிற்சாலையையும் தொடங்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து இத்துறையில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். (FONAR கம்பெனியே டமாடியான் சார்பாக தற்பொழுது நோபெல் பரிசைக் குறை கூறி பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் லாட்டர்பர், தனது ஆரம்ப கால ஆராய்ச்சிக்குப் பிறகு, பெரிதாக இத்துறையில் தீவிரமாக அக்கறை காட்டவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டு 1974ல் தொடங்கி இன்று வரை கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப உத்திகளும், பல கணிப்பொறிச் செய்வழி முறைகளும் (computer algorithms) இந்தத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. எனவே மூன்று பேருக்கும் நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று டமாடியானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்

AM 9:40 வழங்கியவர் ameerdeen

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்; இலகு ரக விமானம் தயாரிக்க முடியும்; குண்டு துளைக்க முடியாத கட்டடத்தை கட்ட முடியும்!ஆம், மலேசிய பெண் விஞ்ஞானி ஹாமில்டன் ஹாம்டான் கண்டுபிடிப்பு, வியாபார ரீதியாக கிடைக்கும் போது, இதெல்லாம் சாத்தியப்படும்!மலேசிய விஞ்ஞானி ஹாமில்டன்; மலேசிய பல்கலைக்கழகத்தில் இப்போது, வேதியியல் பேராசிரியை. அமெரிக்காவில் இருந்து மலேசியா திரும்பியபோது, ஒரு வித்தியாசமான செய்தியை படித்தார்.

"ஏரோஜெல்' என்ற ரசாயன விந்தைப்பொருள் பற்றிய கட்டுரை அது. "சிலிகா' என்ற ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்படும் "ஏரோஜெல்' மூலம், மின்சாரம் தயாரிக்கலாம்; இலகு ரக விமானம் வரை கூட, எந்த பொருட்களையும் தயாரிக்கலாம்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராய்ச்சியை துவங்கினார் ஹாமில்டன். எட்டாண்டுக்குப் பின், சமீபத்தில் தன் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளார். அரிசி உமியில் இருந்து, "சிலிகா'வை தயாரிக்கலாம். அதை வைத்து "ஏரோஜெல்' தயாரித்து, புது வித ரசாயன பொருளை உருவாக்கலாம். அதைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்; குண்டு துளைக்காத கட்டடங்களை கட்டலாம்; விமானம் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்தார்.

"ஏரோஜெல்' புதிதல்ல; 1931ம் ஆண்டில் அமெரிக்கா உட்பட சில நாட்டு விஞ்ஞானிகள், இதை கண்டுபிடித்து, பயன்படுத்தியுள்ளனர். 1999ம் ஆண்டு, அமெரிக்க "நாசா' விண்வெளி விஞ்ஞானிகளும், தங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தியுள்ளனர்.மணலில் இருந்து "சிலிகா' கிடைக்கிறது. அதை, "ஏரோஜெல்'லாக உருவாக்க ஏகப்பட்ட செலவு பிடித்தது. அதனால் அதை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் கைவிட்டனர்.மணலுக்கு பதிலாக அரிசி உமியில் இருந்து "சிலிகா' தயாரிக்கலாம் என்று ஹாமில்டன் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து ஹாமில்டன் கூறுகையில், "நான் கண்டுபிடித்துள்ளதில், உமியில் இருந்து கிடைப்பது 99 சதவீதம் காற்று தான். அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்; பின் வெளிப்படும் வெள்ளை பவுடரில் இருந்து பிளாஸ்டிக் போல, பல்வேறு இலகுரக சாதனங்களை செய்யலாம்; குண்டு தகர்க்க முடியாத வகையில் கட்டடங்களில் சாதனங்களாக பயன்
படுத்தலாம். இன்னும் சில ஆண்டுகள் இதுகுறித்து முழு ஆய்வு செய்த பின், வர்த்தக ரீதியாக தெருக்கு தெரு கிடைக்கும் பொருளாக இது ஆகி விட வேண்டும் என்பது தான் என் கனவு' என்கிறார்.

மொபைல் போன்களின் கோட் எண்கள்

PM 6:50 வழங்கியவர் ameerdeen

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு கோட் எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் மொபைல் போனின் அடிப்படைத் தன்மைகளை அறிய சில கோட் எண்களை வகுத்து தந்துள்ளன. இது மொபைல் போனின் பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.


எல்.ஜி. போன்களின் கோட் எண்கள்
போனின் டெஸ்ட் மோடுக்குச் செல்ல –– 2945#*#
எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர – 2945*#01*#
மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய – *8375#
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை அறிய –*#06# இது எந்த போனுக்கும் பொருந்தும்.
போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட–2945#*70001#
எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 1945#*5101#
எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2945#*5101#
எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட 2947#*

நோக்கியா போன்களுக்கான ரகசிய கோட் எண்கள்

இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும்.

*#7780# –பேக்டரி செட்டிங்ஸை போனில் மீண்டும் அமைக்க
*#3283# போன் தயாரான தேதியை அறிந்து கொள்ள
*#746025625# – சிம் கடிகாரத்தை நிறுத்த
*#67705646# ஆப்பரேட்டர் லோகோவை நிறுத்த
*#73# – கேஸ் ஸ்கோர் மற்றும் போன் டைமரை ரீசெட் செய்திட
*#0000#–மொபைல் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
*#92702689# – மொபைல் வாரண்டி குறித்த செட்டிங்ஸ் அறிய (சீரியல் எண், எங்கு தயாரானது, வாங்கப்பட்ட தேதி,ரிப்பேர் செய்த தேதி, போன் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தாங்கும் போன்ற தகவல்கள்)

சாம்சங் போன்களுக்கான குறியீடு எண்கள்

சாம்சங் தந்த பழைய போன்களுக்கு இது பொருந்தாமல் இருக்கலாம்.

*#9999# – மொபைல் சாப்ட்வேர் பதிப்பு எண் அறிய
#*3849#– சாம்சங் போனை ரீ பூட் செய்திடும்
#*2558# – மொபைல் டைமை ஆன் / ஆப் செய்திட
#*7337# – அண்மைக் காலத்தில் வெளியான சாம்சங் போன்களை அன்லாக் செய்திட
#*4760# – போனின் ஜி.எஸ்.எம். வசதிகளை ஆப் / ஆன் செய்திட
*#9998*246# – மெமரி மற்றும் பேட்டரி குறித்த தகவல்களை அறிய
*#7465625# –– மொபைலின் லாக் எந்நிலையில் உள்ளது என்று அறிய
*#0001# – மொபைலின் சீரியன் எண்ணை அறிய
*2767*637# – மொபைலின் கோட் எண்ணை அன்லாக் செய்திட
*#8999*636# –மொபைலின் ஸ்டோரேஜ் திறனைக் காட்ட
*2562#– சாம்சங் மொபைல் போன்களை ரீ பூட் செய்திட.

மோட்டாரோலா ரகசிய குறியீடுகள்

மொபைல் கீகளை லாக் செய்தி-ட-வும் பின் அதனை விலக்க-வும் பயன்ப-டுத்த வேண்டிய கீகள்
*7
அனைத்து மோட்டா-ரோலா மொபைல் போன்க-ளை-யும் அன்லாக் செய்தி-டும் மாஸ்டர் கீ
1998072
ஐ.எம்.இ.ஐ. என்னும் போனின் தனி எண் அறிய
*#06#

மொபைல் போன் தயா-ரிப்பு குறித்து தெரிந்து கொள்ள
*#403#
கீயின் பங்சன் குறித்து சோதனை செய்திட
* #301#
போனின் மொழியை ஆங்கி-லத்திற்கு மாற்ற
* #303#
மொபை-லின் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் பதிப்பு குறித்து அறிய
* #300#
பேக்ட-ரி-யில் செட் செய்யப்பட்ட குறி-யீ-டு-க-ளைக் கொண்டு வர
* #311

ரூபாயை பற்றி

PM 6:46 வழங்கியவர் ameerdeen




LATEST:

Grab the widget  Tech Dreams