துபாய் குறித்து அறிய உதவும் இணையத்தளம்

AM 7:32 வழங்கியவர் ameerdeen

http://www.dubai.ae/ எனும் இணையத்தளம் துபாய் குறித்து பல்வேறு தகவல்களை அறிய உதவுகிறது.
இவ்விணையத்தளத்தில் துபாய் குறித்த தகவல்கள், விசா பெறும் வழிமுறைகள், மின் இணைப்பு பெற இணையவழி விண்ணப்பம், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீட்டுவசதித்துறை, சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சேவைகளை மின்னஞ்சல் வாயிலாகப் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையம் வழி சேவைகளைப் பொதுமக்கள் உபயோகித்து தங்களது நேரத்தை சேமிக்க துபாய் அரசு இத்தகைய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இளைய தலைமுறையினரைக் கவரும் ஷேக் முஹம்மத் இணையத்தளம்

AM 7:32 வழங்கியவர் ameerdeen

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், துபாய் ஆட்சியாளர் என முப்பெரும் பொறுப்புகளை வகித்து வருபவர் மேன்மை மிகு ஷேக் முஹம்மத் பின் ராஷித் அல் மக்தூம். புதிய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள www.sheikhmohammed.co.ae எனும் இணையத்தளம் இளைய தலைமுறையினரை பெருமளவு கவர்ந்துள்ளது.



இவ்விணையத்தளத்தில் ஷேக் முஹம்மத் அவர்கள் கலந்து கொண்ட செய்திகள், சிறப்புக்குறிப்புகள், வரலாறு, கவிதை, படிப்பு, விருதுகள், வரலாறு, சுற்றுலா, ஊடகம், வீடியோ உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. இணையத்தளத்தை பார்வையிடுவோர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷேக் முஹம்மத் சிறந்த ஆட்சியாளராக மட்டுமல்லாது ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவரது கவிதைகளும் இவ்விணையத்தளத்தில் காணப்படுகின்றன.

துபாயில் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க உதவும் இணையத்தளம்

AM 7:31 வழங்கியவர் ameerdeen

துபாயில் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் கீழ்க்கண்ட இணையத்தளம் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
http://www.labourcomplaints.ae/
புகார் தெரிவிக்க தொலைபேசி எண் : 800 9119 மேலும் தங்குமிட வசதி குறைபாடு, சம்பளம் தராமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்

நீங்கள் அனுப்பிய மெயிலை படித்துவிட்டாரா? அறிவது எப்படி?

PM 7:00 வழங்கியவர் ameerdeen

நீங்கள் ஒரு முக்கியமான நபருக்கு / நண்பர்களுக்குப் மெயில் அனுப்பி விட்டு, அவருடைய பதிலுக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள். குறைந்த பட்சம், அவர் உங்கள் மெயில் படித்து விட்டாரா இல்லையா என்பதை அறிந்து கொண்டால் நன்றாக இருக்குமே!
நீங்கள் அனுப்பிய மெயிலை உங்கள் நண்பர் படித்து விட்டாரா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, spypig என்ற நிறுவனம் இந்த சேவையை அளிக்கிறது.

செய்முறை விளக்கம்:

1). முதலில் எப்போதும் போல மெயில் டைப் அடித்து, தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2). இப்போது, www.spypig.com இணைய தளத்திற்குச் செல்லுங்கள்.

அங்கு, உங்கள் முகவரி, உங்கள் நண்பர் முகவரி கொடுங்கள். Step 3 -ல் முதல் படத்தைத்(வெற்றுப் படம்) தேர்ந்து எடுத்து, ”Click to Activate my Spypig" என்பதைச் சொடுக்குங்க. (அப்படி செய்தால், நீங்கள் ட்ராக் செய்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.)

3). இப்போது ஒரு பெட்டியில் நீங்கள் தேர்ந்து எடுத்த படம் காட்டப்படும். அதன் மீது சுட்டியை வைத்து, வலது பொத்தானை சொடுக்கி, “Copy Image" (Firefox) & Copy(IE) சொடுக்கி, copy செய்யவும்.
இப்போது நீங்கள் டைப் செய்து வைத்த மெயிலை திறந்து, அந்த பக்கத்தின் அடியில் இந்த படத்தை ஒட்டி, உடனே மெயிலை அனுப்பி விடுங்கள்.
(கவுண்ட் டவுன் டைமர் ஓடும், அந்த ஒரு நிமிடத்திற்குள் மேலே கூறியதைச் செய்ய வேண்டும்.) அவ்வளவு தான்.


நீங்கள் அனுப்பிய மெயிலை அவர் திறந்த உடன், எந்த ஊரிலிருந்து படித்தார், எப்போது படித்தார் போன்ற தகவல்கள் உங்கள் மெயிலுக்கு வந்துவிடும்.

blogger-ல் Navbar-ஐ நீக்குவது?

PM 6:48 வழங்கியவர் ameerdeen

1) உங்கள் blogger account-டில் login செய்யவும்.
2) Dashboard-இல் நுழைந்த பின் "Layout"-ஐ கிளிக் செய்யவும்.
3) அதில் "Edit HTML"-ஐ கிளிக் செய்யவும்.
4) அந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டதைப் போல இருக்கும்.

[CDATA[/*
-----------------------------------------------
Blogger Template Style
Name: Rounders
Designer: Douglas Bowman
URL: www.stopdesign.com
Date: 27 Feb 2004
Updated by: Blogger Team
----------------------------------------------- */

இந்த வரிக்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்ட வரிகளை சேர்த்துவிடவும்.


#navbar-iframe {
display: none !important;
}

அதன் பிறகு இருக்கும் வரிகளை அப்படியே விட்டுவிடவும்.

/* Variable definitions
====================


...

மென் தொலைபேசி (softphone)

AM 8:17 வழங்கியவர் ameerdeen



மென் தொலைபேசி ஒரு மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் இரு இடங்களில் இருக்கும் மனிதர்கள் தொலைபேசிக் கருவி (வன்பொருள்) இல்லாமல் உரையாடிக் கொள்ளலாம். இதற்கு VoIP தொழில்நுட்பம் பயன்படுகிறது.

ஒரு தொலைபேசிக் கருவி என்ன வேலை செய்யுமோ, அதே வேலையை கணினியில் இருக்கும் ஒரு மென்பொருள் செய்துவிடுகிறது. ஒரு கணினியில் இருந்து உலகின் வேறொரு இடத்தில் இருக்கும் கணினி / தொலைபேசி / அலைபேசிக்கு அழைப்புகள் விடுக்கவோ - அழைப்புகள் பெறவோ சாஃப்ட் ஃபோன் உதவுகிறது.

கீழே முக்கியமான அதிகம் பயன்படுத்தப்படக்கூடிய சாஃப்ட் போன் மென்பொருள்களைக் கொடுத்துள்ளேன்.


http://www.skype.com/

http://www.sipphone.com/

http://www.voipstunt.com/

http://www.voipstunt.com/

http://www.jajah.com/

http://www.talkster.com/

http://www.yeigo.com/

http://www.fring.com/

http://www.apple.com/macosx/features/ichat.html

http://www.icall.com/

http://counterpath.com/index.php?menu=Products&smenu=xlite

http://www.talkety.com/

http://www.raketu.com/en/index.php

http://www.nimbuzz.com/

http://www.jaxtr.com/user/index.jsp

http://www.wengo.fr/index.php

நீளமான இணைய முகவரிகளைச் சுருக்குவது

AM 8:13 வழங்கியவர் ameerdeen

நம் நண்பர்கள் அனைவருமே இணையத்தளமோ (web site), வலைப்பதிவோ (blog) வைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இணைய முகவரி (URL ) கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பதிவுகளுக்கும் தனித்தனி முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு பதிவின் முகவரியைத் தொலைபேசியின் ஊடாக வேறு ஒரு நண்பருக்குத் தெரிவிக்க முயற்சித்தால் தகவல் இழப்புதான் நிகழும்.

ஏனெனில் பதிவின் முகவரி (URL for post address) மிக நீளமானதாகவும், தொலைபேசியின் அடுத்த முனையில் இருப்பவருக்குச் சிரமம் கொடுப்பதாகவும் அமைந்திருக்கும்.

தொலைபேசி வாயிலாக ஒரு குறிப்பிட்ட பதிவின் முகவரியை எழுத்துப்பிழையில்லாமல் தெரிவிக்க இது போன்ற கருவிகளைப் பயன்படுத்தலாம்.


குறிப்பிட்ட சில புக்மார்க் திரட்டிகளில் (book mark aggregators) ஏதேனும் காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட URL ஐ நிராகரித்திருப்பார்கள். அந்த URL ஐ அவர்களது Filter நுட்பம் வடிகட்டிவிடும்.

இந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட URL ஐ சுருக்கி வேறோரு URL ஆக மாற்றி அதை bookmark திரட்டிகளில் submit செய்யலாம். இது ஒரு காரணம். இது போல பல காரணங்கள்.

மிக நீளமான இணைய முகவரிக்குப் பதிலாக சிறிய முகவரியைப் பயன்படுத்தலாம். இதற்கு URL Redirection என்று பெயர்.

இந்தச் சேவையை வழங்குவதற்காக கீழ்க்கண்ட தளங்கள் உள்ளன.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2805

http://metamark.net/

http://notlong.com/

http://xaddr.com/

http://www.snipurl.com/site/index

http://doiop.com/

http://memurl.com/

http://shorl.com/

http://qurlyq.com/

http://is.gd/

http://traceurl.com/index.html?locale=en#t0

http://tinyurl.com

CD ரைட் பண்ணுவதை எப்படி வேகபடுத்துவது?

PM 3:02 வழங்கியவர் ameerdeen

CD Drive, CPU வின் தலையீடில்லாமல் மெமறியை எழுதவோ வாசிக்கவோ முடிந்தால் CD சுடுவது வேகமாக நடைபெறும். தவிர வேகம் என்பது CD டிறைவின் வேக பெறுமதியையும் பொறுத்தது. இதை Xல் கணக்கிடுவார்கள். X என்பது ஆரம்பத்தில் வெளிவந்த CD Rom டிறைவின் வாசிக்கும் வேகமாகிய 150 கி.பைட்ஸ்/செ. ஆகும். இப்போது வெளிவருகின்ற CD Rom டிறைவுகளின் உச்ச வேகம் 72X கொண்டவைகளாகவுள்ளன. அதாவது 72x150 கி.பை/செ என்பதாகும். சில CD - R டிறைவுகளின் முகப்பில் 48X/24X என காணப்படும். இதில் முதலாவது வாசிக்கும் வேகம். இரண்டாவது எழுதும் வேகமுமாகும். இன்னும் சிலவற்றில் 48X/24X/12X என காணப்படும். இதில் 12X எனப்படுவது சிடியை அழித்து திருப்பி எழுதும் வேகமாகும். இம்மூன்றில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவெனில் கூடிய பெறுமதியுடைய எண் வாசிக்கும் வேகத்தையும், அடுத்த பெறுமதியுடைய எண் எழுதும் வேகத்தையும், குறைந்த பெறுமதியுடைய எண் அழித்து எழுதும் வேகத்தையும் காட்டுகின்றது என்பதாகும்.

ஆரம்பத்தில் பாடல்களை பதிவு செய்ய ஓடியோ சீடி (Audio CD-Rom) தொழில்நுட்பம் 1980ல் உருவானது. பின்பு இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கம்பியூட்டர் உலகில் விலைகூடிய இயந்திரங்களைக்கொண்டு Data வை பதிவு செய்தார்கள். அடுத்து சாதாரண பாவனையாளருக்காக மலிவு விலையில் வாசிக்க மாத்திரம் உதவும் CD-Rom drive உருவானது. பின்பு மென்தட்டு போல எழுதவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் 1990ல் ஏற்பட்டதே CD-R drive. இதை மேலும் மேம்படுத்தி CD-RW drive வை உருவாக்கினார்கள். இந்த drive கள் ஒரு கண்ணாடியையும் லேசர் கதிரையும் பாவித்தே டிஸ்க் ஐ வாசிக்கின்றன.

CD -Compact Disc- 12 cm விட்டமுடையதாகும். 650-700 மில்லியன் பைட்ஸ் வரை கொள்ளக்கூடியது. டிஸ்க் களில் CD-R, CD-RW, Music CD-R என மூன்று வகையுண்டு.

இப்போது CD Drive CPU வின் தலையீடில்லாமல் எழுத, வாசிக்க வேண்டிய செற்றிங் என்னவென பார்ப்போம். இச்செயலை DMA - Direct Memory Access - என்பார்கள். "My Computer" ஐ வலது கிளிக் செய்து பின் Properties, Hardware Tab, Device Manager, இவைகளை கிளிக் செய்து, IDE ATA/ATAPI என்பதன் முன்னுள்ள ப்ளஸ் அடையாளத்தை கிளிக் செய்து, Primery IDE Chl என்பதில் வலது கிளிக் செய்து, Properties என்பதில் கிளிக் செய்து, Advance Settings என்பதை கிளிக்பண்ணி, Transfer Mode என்ற பெட்டியில் "DMA if available" என்றிருந்தால் அப்படியே விட்டுவிடவும். "PIO only" என்றிருந்தால் பெட்டியின் வலபக்க முக்கோணத்தை கிளிக் செய்து "DMA if available" என்பதை தேர்வு செய்யவும். கம்பியூட்டரை reboot பண்ணவும். Pio-Programmable Input/output- என்பது பழைய மிகவும் மெதுவான தரவு பரிமாற்றம் செய்யும் முறையாகும்

CD - Rom என்பது Compact Disc - Read Only Memory
CD - R என்பது Compact Disc - Recordable
CD - RW என்பது Compact Disv - Rewriteable
DVD - என்பது Digital Versatile Disc

CD யில் Data வை பதிவு செய்து (மிக நுண்ணிய குழி 1 எனவும், குழி அல்லாத மேடு 0 என பைனறியில் பதிவு செய்தல்) விட்டு லேசர் கதிரால் சூடேற்றி கடினப்படுத்துவதால் "CD Burning" எனப்படுகின்றது. அழித்து எழுதும்போது இப்பகுதி மீண்டும் மென்மையாக்கப்பட்டு, எழுதப்பட்டு, மீண்டும் சூடேற்றப்படுகிறது.

Hub,Switch,Router என்றால் என்ன?

PM 3:01 வழங்கியவர் ameerdeen

Hub என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.

Switch என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.

Router என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.

தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.

எளிதாக நாம் விரும்புவதை xp யில் திறக்க

PM 2:57 வழங்கியவர் ameerdeen

நாம் அடிக்கடி பாவிக்கும் எந்த ஒரு புறோகிறாமையும் இயக்கவேண்டுமெனில் நாம் வழமையாக செய்வது டெஸ்க்ரொப்பில் உள்ள ஐகொன் ஐ மொளசால் கிளிக்பண்ணி திறப்பதுதான். இதற்கு ஒரு குறுக்குவழியுண்டு. உதாரணத்திற்கு இன்ரர்நெட் எக்ஸ்புளோரருக்கு குறுக்குவழியை ஏற்படுத்திப்பாறர்ப்போம்.

நியூமெரிக் கீபேட்டில் உள்ள Num Lock கீயை அழுத்தவும். மேலே பச்சை விளக்கு எரிந்தால் ஆன் என அர்த்தம். டெஸ்க்ரொப்பில் உள்ள e ஐகொன் ஐ வலது கிளிக்பண்ணி வரும் மெனுவில் புறோபட்டீஸ் என்பதை தேர்வுசெய்யவும். பின் shortcut tab ஐ தேர்வுசெய்யவும். பின் shortcut Key fபீல்டில் கிளிக்பண்ணி அந்த புறோகிறாமை இயக்க எந்த நம்பர் கீ தேவையோ அதை நியூமெரிக்கீபாட்டில் அழுத்தவும்.பின் OK ஐ அழுத்தவும்.

இப்போது கம்பியூட்டரை ஆன் செய்தவுடன் அந்த் கீயை அழுத்தியவுடன் படார் என அந்த புறோகிறாம் திறக்கும். இப்படி வேண்டிய எந்த புறோகிறாம்களுக்கும் செய்துகொள்ள்லாம்

Error ரிப்போர்ட் ஐ செயல் இழக்க செய்ய.

PM 1:54 வழங்கியவர் ameerdeen

காரணம் என்ன என்று என்னால் சரியாக சொல்லத தெரியாது. அல்லது காரணம் பலவாறாக இருக்கலாம். னால் தவறு நடந்துவிட்டது. இந்த தவற்றை மைக்கிறோசொவ்ற்றிக்கு அறிவிக்கவா? என கேட்டு செய்தி பெட்டி திரையில் தோன்றுவது சகஜம். இந்த செய்தி நண்பர்கள் கொடுத்த விலைக்குவாங்காத இயங்குதள பிரதியை தங்கள் கம்பியூட்டரில் நிறுவியுள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும். அந்த பிரதி வைத்திருப்பவர்களின் IE திரையில் Help மெனுவை கிளிக்பண்ண Is your copy of windows legal? என்ற செய்தியும் சில வேளைகளில் தோன்றி அதிர்ச்சி கொடுப்பதுண்டு. இந்த தொல்லையை நிறுத்தலாம் எப்படி?

Start --> Control Panel -->Double click System --> Advanced Tab --> Error Reporting --> click to disable Error Repoting.

இது எக்ஸ்பி க்கு பொருந்தும். இனிமேல் இந்த செய்தி வரவே வராது

Proxy Server என்பது என்ன?

PM 1:48 வழங்கியவர் ameerdeen

இணையத்தில் தட்டுப்படும் சொல் இது. ஈ-மெயில், உலாவி, இவைகளில் ஏதாவது settings செய்யும்போது உங்கள் proxy sever ன் விலாசம் என்ன என்று கேட்கப்படலாம்.
Proxy Server என்பது உலாவிக்கும் வெப்தளங்களை காட்சிக்கு வைத்திருக்கும் Web Server க்கும் நடுவிலுள்ள இடைமுகப்பாகும். அல்லது இடையில் நின்று உங்களுக்கு உதவும் சேவையாகும்.அல்லது ஒரு தரகர் என்று கூட சொல்லலாம். இந்த Proxy server உங்கள் கம்பியூட்டர்
அமைந்துள்ள Local Nerwork இனுள் காணப்படும்.
உலாவி இணையத்தில் ஒரு பக்கத்தை தேடும்போது Proxy server தலையிட்டு உதவமுன்வரும்: தனது சேமிப்பு கிடங்கில் அந்த பக்கம் கிடக்கா என பார்க்கும், கிடந்தால் அங்கிருந்து எடுத்து அனுப்பும். இன்றேல் இணையத்தில் தேடி உரிய Web Server இலிருந்து எடுத்து அனுப்பிவைக்கும்.
X,Y என்ற இரு இந்திய நபர்களுக்கு கனடாவிலுள்ள Web Server ரில் உள்ள ஒரே வெப்பக்கம் தேவைப்படுகிறது. முதலில் X தனது உலாவி மூலம் தேடுகிறார். Proxy Server தலையிட்டு தன்னிடம் தேடி இல்லையென கண்டவுடன் கனடாவிலுள்ள வெப்சர்வரிடமிருந்து பெற்று உலாவி உள்ள
கம்பியூட்டருக்கு அனுப்பி வைக்கிறது. அப்போது பிரதி ஒன்றை தன்னிடம் வைத்துக்கொள்கிறது. பின் Y என்பவர் அதே பக்கத்தை தேடும்போது Proxy Server தன்னிடமுள்ள பிரதியில் இன்னொரு கொப்பியை Y என்பவரின் கணணிக்கு அனுப்பிவைக்கிறது.
Proxy Serverகள் இணையத்தின் போக்குவரத்து நெருக்கடிகளை தளர்த்தி திறனையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகிறது. வேண்டப்படாத
போக்குவரத்துகளை தடுக்கிறது. இணைய சேவை வழங்குனர்க்கு ஒரு Switch Board போலவும் இயங்குகிறது, உங்களுக்கு தேவை ஏற்படும்போது இதன் விலாசத்தை இணைய சேவை வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் இன்னொரு IP Address ஆக இருக்கும். .

குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்?

AM 11:28 வழங்கியவர் ameerdeen

பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை.

சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நிலைக்குமேல் காப்பாற்ற முடியாமல் கைவிடும்போது நுரைபோல் பொங்கி வெளிப்பட்டுவிடுகிறது.

பால் குக்கரில் அப்படி கன்வெக்ஷன் சுழற்சி நடைபெறு வதில்லை அதுதான் காரணம்.

பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல்

AM 11:27 வழங்கியவர் ameerdeen

*ரஷ்ய வானியல் நிபுணர் அறிவிப்பு
பூமியை தாக்குவதற்காக வந்து கொண்டிருக்கும் இராட்சத விண்கல் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததென ரஷ்ய வானியல் நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிலையம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இராட்சத விண்கல் 2029 ஆம் ஆண்டளவில் பூமியின் சுற்றுப் பாதையைக் கடக்கும்போது அப்பாதையிலிருந்து விலகி பூமியைத் தாக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கோள் மண்டலத் தொகுதியில் சூரியனை மையமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங்களைப் போல சிறுசிறு உலோகக் கற்களும் சுற்றிவருகின்றன. இதில் அஸ்டிராயிட்ஸ் எனப்படும் ஏராளமான விண்கற்களில் அபோபிஸ் என்ற இந்த விண்கல்லும் ஒன்று.

அதிகூடிய வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் இக்கல் அதே வேகத்திலேயே பூமியைத் தாக்கும் போது இரண்டாம் உலகப் போரின்போது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு ஏற்படுத்திய தாக்கத்திலும் பார்க்க ஆயிரம் மடங்கு அதிக சக்தி வெளிப்படுத்தப்படும்.

இத்தாக்கம் பூமியில் ஏற்படும்போது பூகம்பம் ஏற்படுவது போன்ற அதிர்வு ஏற்படுவதுடன் பேரழிவினையும் பூமி சந்திக்க நேரிடும்.

இருந்தாலும் அசுர வேகத்தில் பெருவளர்ச்சியினையும் வெற்றிகளையும் கண்டுள்ள விஞ்ஞானத்தின் நவீன தொழில்நுட்பத்தின் புதிய உத்திகளையும் செயற்கைக் கோள்களையும் பயன்படுத்தி இந்த இராட்சத விண்கலம் பாதையைத் திருப்பி பூமியை தாக்கத்திலிருந்து காப்பாற்றலாமென அவ்வூடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் 10:10 என்று காட்டுவது ஏன்?

AM 11:25 வழங்கியவர் ameerdeen



உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்!

அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என அமெரிக்கர்கள் எண்ணினர். அதையே மற்ற நாடுகளும் பின்பற்றத் தொடங்கின

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் கார்

AM 10:27 வழங்கியவர் ameerdeen

தரையிலும் தண்ணீரிலும் ஓடும் கார்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை நேரிலேயே கண்டுகளியுங்கள்

கார் விபத்துகளை தடுக்க

AM 9:44 வழங்கியவர் ameerdeen

கார் விபத்துகளை தடுக்க எச்சரிக்கை விடுக்கும் கேஸ் பெடல் ஒன்றை சில கார்களில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதாவது ஏதோ ஒன்றுடன் கார் மோதும் நிலை ஏற்படும்போது இந்த கேஸ் பெடல் சற்றே தன்னை தூக்கிக் கொள்ளும். இந்த எச்சரிக்கையை உணர்ந்து ஓட்டுனர்கள் ஆக்சிலேட்டரிலிருந்து காலை எடுத்து விட்டால் கார் தானாகவே நின்று விடும்.

ராடார் உணர் கொம்புகள் (Sensors) மற்றும் கணினி இணைந்த இந்த தொழில்நுட்பம் காரின் வேகம் மற்றும் முன்னால் செல்லும் அல்லது வரும் வாகனத்தின் தூரம் ஆகியவற்றை கணித்து விடும் என்று நிஸ்ஸான் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார்கள் இந்த ஆண்டு முதல் ஜப்பானிலும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று அந்த நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.

நம் பழக்கும் ஒரு விலங்கு போல் சாலையின் ஆபத்துகளை இது முன் கூட்டியே நமக்கு அறிவித்து விடும். மனிதனும் எந்திரமும் சேர்ந்து பணியாற்றி அபாயத்தை தடுத்துக் கொள்ளலாம் என்று நிஸ்ஸானின் மூத்த மேலாளர் யூசுகே அகட்சு தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருவர் குதிரையில் பயணம் செய்வது போல்தான் இது... குதிரையின் கட்டுப்பாடு நம் கையில் இருப்பதுபோல் இதில் எந்திரத்தின் கட்டுப்பாட்டில் நாம்... என்று அவர் மேலும் இதனை விரிவுபடுத்தினார்.

கேஸ் பெடலிலிருந்து ஓட்டுனர்கள் காலை எடுத்தவுடன் பிரேக்குகள் தானாகவே வேலை செய்து காரை நிறுத்தி விடும். ஆனால் எச்சரிக்கையை உணராமல் காலை ஆக்சிலேட்டரிலேயே வைத்திருந்தால் கார் போய்க்கொண்டுதான் இருக்கும்.

மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுகிறீர்களா... இதோ வருகிறது எச்சரிக்கை!

காரில் உள்ள கியரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் ஓட்டுனரின் வியர்வையிலிருந்து அவர் குடித்திருக்கும் மதுவின் அளவை கணக்கிட்டு விடும் அதிசய தொழில்நுட்பம் ஒன்றையும் பரிசோதனை முயற்சியாக நிஸ்ஸான் செய்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது அருந்தியிருந்தீர்கள் என்றால் காரின் எஞ்சின் நிற்காது அவ்வளவுதான். மற்றபடி மின் குரல் ஒன்று வந்து உங்களை எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும்.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனெனில் நம் நாட்டில் மட்டுமல்ல ஜப்பானிலும் குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பது தினசரி நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனால் ஜப்பானில் கடந்த ஆண்டு சுமார் 611 விபத்துகள் நடந்துள்ளதாக நிஸ்ஸான் கூறுகிறது.

மேலும் ஓட்டுனர் வண்டியை தடம் மாற்றி தட்டுத் தடுமாறி ஓட்டுகிறாரா, ஓட்டுனர் குடித்திருக்கிறாரா அல்லது போதையில் ஓட்டுகிறாரா என்பதை கணினி மயமாக்கப்பட்ட காமிரா ஒளி மூலமாக காட்டி விடும்.

இது போன்ற கண்காணிப்புகள் நிறைந்த தொழில்நுட்பம் கொண்ட ஒரு காரை மக்கள் பொதுவாக விரும்ப மாட்டார்கள்தான்... எனினும் டெலிவரி டிரக்குகள், டாக்சி கேப்கள் ஆகியவற்றை நிர்வகிக்க இத்தகைய தொழில்நுட்பங்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றனர் என்று நிஸ்ஸான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் முக்கியமான அதிக பாதுகாப்பான ஒரு விஷயம் என்னவென்றால், பெரும்பாலான விபத்துகள் தடம் மாறுவதால் ஏற்படுவதே. ஆனால் இது புதிய தொழில்நுட்ப வாகனங்கள் தடம் மாறினாலும் மீண்டும் நேரான தடத்திற்கு தானாகவே வந்து விடும். இந்த தட தொழில்நுட்பம் அமெரிக்காவில் இன்ஃபினிடி எக்ஸ் லக்சுரி மாடல் கார்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதே போல் நடந்து செல்பவர்களின் மேல் கார் இடித்து விடும் பட்சத்தில் பம்பரில் பொருத்தப்பட்டுள்ள உணர்கொம்புகள் எஞ்சின் மூடியை லேசாக தூக்கி அவருக்கு தீவிரமாக அடிபடாமல் காக்கிறது.

ஸ்போர்ட்ஸ் மாடல் கார்களில் எஞ்சின் மூடிக்கும் எஞ்ஜினுக்குமான இடைவெளி மிகக்குறைவாக இருக்கும். இம்மாதிரி கார்களில் அடிபடும்போது காயங்கள் தீவிரமாக ஏற்படுகிறது. எனவே மூடி லேசாக தூக்குவதன் மூலம் எச்சரிக்கை விடுத்து அடிபடுபவர் பெருமளவு காயம் ஏற்படாமல் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதுபோன்ற வசதி தற்போது ஃபோர்டின் ஜாகுவார் மற்றும் ஹோன்டா கார்களில் உள்ளது. ஜப்பானில் இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரை எரி பொருளாக கொண்டு ஓடும் கார்

AM 9:44 வழங்கியவர் ameerdeen

நீரை எரி பொருளாக கொண்டு ஓடும் கார்

நனைந்தபடி செல்போனில் பேசலாம்

AM 9:42 வழங்கியவர் ameerdeen

இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும். மழையிலோ, பாத்ரூம் ஷவரிலோ நனைந்தபடி செல்போனில் பேசலாம். நீர் புகாத நவீன தொழில்நுட்பத்தால் செல்போன்கள் நீரில் நனைந்தாலும் பாதிப்படையாமல் இயங்கும் வசதி விரைவில் வருகிறது.

இதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரசாயன தாக்குதல்களில் இருந்து வீரர்களைக் காக்க ராணுவம் நவீன தொழில்நுட்பத்தைக் கையாள்வதுபோல செல்போனை நீரில் இருந்து பாதுகாக்க தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

அதற்காக போனின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத நீர் தடுப்பு பூச்சு ஏற்படுத்தப்படும். அதன்மீது நீர் பட்டாலும் ஒட்டாமலும், உள்ளே புகாமலும் வழிந்தோடி விடும். அதன்மூலம், செல்போனுக்குள் நீர் புகுந்து சர்க்யூட்களை சேதப்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு விடும். நீர் தடுப்பு பூச்சு பூசப்பட்ட செல்போன், மழை, பனி, தவறுதலாக நீரில் விழுதல், வியர்வை ஆகியவற்றால் பாதிக்கப்படாது.

செயற்கைத் தோல்

AM 9:41 வழங்கியவர் ameerdeen

பாலிமர் மற்றும் கார்பன் நானோ டியூப்கள் மூலம், நோயாளிகள் மற்றும் ரோபோக்களுக்கு பொருத்தக் கூடிய செயற்கைத் தோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தோல், சூடு, குளிர், அழுத்தம் போன்றவற்றை மூளைக்கு உணர்த்தக் கூடியது.அமெரிக்காவை சேர்ந்த ஓக் தேசிய பரிசோதனைக் கூடத்தில், மூத்த விஞ்ஞானிகள் ஜான் சிம்சன், இலியா இவனோவ் இதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செயற்கைத் தோல், தண்ணீர் உட்புகாத, மேல்புறத்தைக் கொண்டது. இந்த தோல், மடியக்கூடிய, எடை குறைந்த, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலால், இது, வேற்றுப் பொருள் என்று பிரித்துப் பார்த்து நிராகரிக்கப் படாது. மனிதருக்கு பொருத்தப்படும் போது, அதை எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், உடல் ஏற்றுக்கொள் ளும். நோயாளியின் உணர்வு நரம்புகளுடன், நானோ டியூப்கள் இணைக்கப்படும் போது, உணர்வுகளை மூளைக்கு எடுத்துச் செல்லவும், மூளையின் கட்டளையை ஏற்கும் வகையிலும், செயற்கைத் தோல் செயல்படும்.

தற்போது பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைத் தோல், பரிசோதனையில் முழுமையான வெற்றியடைந்துள்ளது. "சாதாரணமாக மனிதர்களின் உடலில் உள்ள தோலைவிட, இது கூடுதல் உணர்ச்சிகளை அறியக்கூடியது' என்கிறார் இதை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானி ஜான் சிம்சன்.

MRI கருவியை பற்றி

AM 9:40 வழங்கியவர் ameerdeen

உடலுக்குள் எந்த கருவியையும் நுழைக்காமல் உள்ளுறுப்புகளை துல்லியமாகப் படம் பிடிக்கும் இம்முறை மருத்துவ உலகில் எத்தகைய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை உலகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் MRI கருவிகளைக் கொண்டு ஆண்டுதோறும் 6 கோடி படங்கள் எடுக்கப்படுகின்றன என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். நூறாண்டுகளுக்கும் முன்பாக உருவாக்கப்பட்ட X-கதிர் படப்பிடிப்பு (X-ray radiography) முறைக்குப் பின் மருத்துவத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட படப்பிடிப்பு முறைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது MRI. காந்த ஒத்திசைவு (magnetic resonance) என்ற அறிவியல் கோட்பாடு 1946-லேயே கண்டு பிடிக்கப்பட்டாலும், காந்த ஒத்திசைவு படப்பிடிப்பு என்ற மருத்துவ சாதனத்தின் அடிப்படைக்கான ஆராய்ச்சி 1969ல்-தான் ஆரம்பித்தது.


காந்த ஒத்திசைவு என்பது சில தனிமங்களின் (elements) அணுக்கருவின் (nucleus) காந்தத்தன்மையை ஆதாரமாகக் கொண்ட ஒரு இயற்பியல் கோட்பாடு. உயிர்கள் அனைத்திலும் பரந்து கிடக்கும் தண்ணிரின் முக்கிய தனிமமான ஹைட்ரஜன் அணுக்கள் மிக அதிகமாக ஆராயப்பட்டவையாகும். 1952ல் இயற்பியல் நோபெல் விருது வாங்கிய பெலிக்ஸ் ப்ளாக் (Felix Bloch) மற்றும் எட்வர்ட் பர்செல் (Edward Purcell) என்ற அமெரிக்க விஞ்ஞானிகள் அணுக்களின் காந்தத்தன்மையைப் பயன்படுத்தி, முதல் காந்த ஒத்திசைவு சோதனையை நடத்தி ஒரு புதிய வேதியல் ஆராய்ச்சிக் கருவியைக் கண்டுபிடித்தனர்.


பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளிக்கூடங்களில் நடத்திய சோதனையில் அறிந்தது, ஒரு காந்தத் துண்டை நூலில் கட்டித் தொங்கவிட்டால் அது வடக்கு தெற்காக திரும்பி நிற்கும் என்பது. இதற்குக் காரணம், பூமியின் காந்தப்புலமே என்பதை அறிவோம். பூமியின் காந்தசக்திக்குப் புறம்பாக அக்காந்தத்துண்டை நகர்த்த வேண்டுமானால் நாம் சிறிது ஆற்றலைச் செலுத்த வேண்டும். தண்ணீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் இது போல காந்தத்துண்டுக்களாக கொள்ளலாம். தண்ணீரை ஒரு பெரிய மின்காந்தப் புலத்தில் வைத்தோமானால், ஹைட்ரஜன் அணுக்களும், அம்மின்காந்தப்புலத்தின் வடக்கு தெற்குத்திசைகளை நோக்கி திரும்பி நிற்கின்றன. அவற்றை மாற்றியமைக்க வேண்டுமெனில் ரேடியோ அலைகளை (Radiowaves) ஆற்றலாகப் பாய்ச்ச வேண்டும். ரேடியோ அலைகளின் அலை நீளம் (wavelength) அல்லது அதிர்வெண் (frequency) மற்றும் வீச்சு (amplititude) போன்றவை அணுக்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் அணுக்களின் காந்தத்தன்மையும் ரேடியோ அலைகளும் ஒத்திசைந்தால் தான், ரேடியோ அலைகளின் ஆற்றலை உட்கொண்டு, அணுக்கள் மின்காந்தப்புலத்தை எதிர்த்து நிற்கும். இந்தக் காந்த ஒத்திசைவின் அடிப்படைத் தத்துவத்தை வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் முழுக்கப் பயன்படுத்தி மூலக்கூறு அமைப்பை (molecular structure) பலபத்து வருடங்களாக ஆராய்ந்து வருகின்றனர்.


இந்த காந்த ஒத்திசைவுக் கோட்பாட்டை மேலும் ஒருபடி எடுத்துச் செல்பவையே காந்த ஒத்திசைவு பிம்பங்கள் (magnetic resonance images). மேலே சொல்லப்பட்ட மின்காந்தம் முழுப்பரப்பளவிலும் ஒரே சீராக (homogenous) இருக்குமாயின், அப்பரப்பளவுக்குள் வைக்கப்பட்ட ஒரு பாத்திரத்திலோ அல்லது ஒரு உடலுறுப்பிலோ உள்ள தண்ணீர் ஹைட்ரஜன் அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக ரேடியோ அலைகளுடன் ஒத்திசையும். ஆனால் மின்காந்தப் புலத்தை அப்பரப்பளவில் நீள வாக்கிலோ அல்லது அகல வாக்கிலோ படிப்படியாக அதிகரித்துக் கொண்டே (magnetic field gradient) போனால், ஹைட்ரஜன் அணுக்களின் காந்த ஒத்திசைவு இடத்துக்கு தகுந்தவாறு மாறியமையும். இதன் மூலம் அந்த பரப்பளவில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களை ரேடியோ அலைகளை வைத்து படம் பிடிப்பது (imaging) சாத்தியமாகும். மேலும் ஒரு உடலுறுப்பில் ஏதாவது கட்டி அல்லது நோய் தாக்கியிருந்தால் அந்தப் பகுதியில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள், மற்ற பகுதிகளில் உள்ள அணுக்களை விட மாறுபட்ட அலை நீளத்தில் ஒத்திசைவு அடையும் என்பதால், MRI படங்களில் அவற்றைக்காண முடியும்.


மருத்துவ நோபெல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டத் துறையான காந்த ஒத்திசைவு பிம்பமுறை (Magnetic Resonace Imaging or MRI) கண்டுபிடிப்புக்குக் காரணமானவர்கள் யார் என்று முடிவு செய்வதில் நோபெல் தேர்வுக்குழு பல வருடங்கள் திணறிக்கொண்டிருந்தது. கடைசியில் பால் லாட்டர்பருக்கும், சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டுக்கும் பரிசைப் பகிர்ந்தளித்தது. ஆனால் இதைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராகக் கருதப்பட்டு வரும் மற்றொரு விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான் (Raymond Damadian), தனக்கும் இந்த நோபெல் பரிசு அளிக்கபட்டிருக்க வேண்டும் என்று பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் 290,000 டாலர்கள் செலவில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டார். இவர் 1988ல் அமெரிக்காவின் மிக உயர்ந்த தேசிய தொழில்நுட்ப விருதை பால் லாட்டர்பருடன் பகிர்ந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதும் பல வித சர்ச்சைகளுக்குப் பின்னால் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே இருவருக்கும் MRI கண்டு பிடிப்புக்கான விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. நேபெல் பரிசு விதிகளில் ஒரு துறையில் மூன்று பேர்கள் வரை பரிசு அளிக்கப்படலாம் என்றிருந்தபோதிலும் தன்னை வேண்டுமென்றே விலக்கிவிட்டு இருவரை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கடுங்கோபத்துக்கு உள்ளாகியுள்ளார் டமாடியான்.

காந்த ஒத்திசைவு பிம்பமுறை (MRI) தொழில் நுட்பத்தை முதலில் கண்டு பிடித்து பிரபல அறிவியல் பத்திரிகையான Nature-ல் 1973-ஆம் ஆண்டு வெளியிட்டார் அப்பொழுது நியுயார்க் மாநில பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பால் லாட்டர்பர். இருப்பினும், அவர் இந்த கோணத்தில் ஆராய்ச்சி செய்யத் தூண்டுகோலாக அமைந்தது என்னவோ, அதே பல்கலைக்கழக வளாகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மருத்துவ விஞ்ஞானி ரேமண்ட் டமாடியான். அவர் 1969லிருந்தே புற்று நோய் தாக்கிய உறுப்புக்களை காந்த ஒத்திசைவுக் கருவிகளை வைத்துப் படம் எடுக்கும் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். ரேமண்ட் டமாடியான், அவருடைய ஆரம்பகால ஆராய்ச்சி முடிவுகளை மற்றொரு பிரபல அறிவியல் பத்திரிகையான Science-ல் 1971-ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார்.

லாட்டர்பரின் தொழில் நுட்பம் தான் இன்றுள்ள MRI கருவிகளின் அடிப்படையாக அமைந்தாலும், டமாடியான்தான் மருத்துவத்தில் படம் பிடிக்கும் கருவியாக காந்த ஒத்திசைவு பிம்பமுறையை பயன்படுத்தலாம் என்ற நோக்கத்துடன் செயல் திட்டத்திலும் இறங்கினார். அவரே MRI கருவிகளைத் தயாரிக்கும் FONAR என்ற முதல் தொழிற்சாலையையும் தொடங்கியது மட்டுமல்லாமல், தொடர்ந்து இத்துறையில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். (FONAR கம்பெனியே டமாடியான் சார்பாக தற்பொழுது நோபெல் பரிசைக் குறை கூறி பிரபல அமெரிக்கச் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் லாட்டர்பர், தனது ஆரம்ப கால ஆராய்ச்சிக்குப் பிறகு, பெரிதாக இத்துறையில் தீவிரமாக அக்கறை காட்டவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்டு 1974ல் தொடங்கி இன்று வரை கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப உத்திகளும், பல கணிப்பொறிச் செய்வழி முறைகளும் (computer algorithms) இந்தத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. எனவே மூன்று பேருக்கும் நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று டமாடியானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்

AM 9:40 வழங்கியவர் ameerdeen

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்; இலகு ரக விமானம் தயாரிக்க முடியும்; குண்டு துளைக்க முடியாத கட்டடத்தை கட்ட முடியும்!ஆம், மலேசிய பெண் விஞ்ஞானி ஹாமில்டன் ஹாம்டான் கண்டுபிடிப்பு, வியாபார ரீதியாக கிடைக்கும் போது, இதெல்லாம் சாத்தியப்படும்!மலேசிய விஞ்ஞானி ஹாமில்டன்; மலேசிய பல்கலைக்கழகத்தில் இப்போது, வேதியியல் பேராசிரியை. அமெரிக்காவில் இருந்து மலேசியா திரும்பியபோது, ஒரு வித்தியாசமான செய்தியை படித்தார்.

"ஏரோஜெல்' என்ற ரசாயன விந்தைப்பொருள் பற்றிய கட்டுரை அது. "சிலிகா' என்ற ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்படும் "ஏரோஜெல்' மூலம், மின்சாரம் தயாரிக்கலாம்; இலகு ரக விமானம் வரை கூட, எந்த பொருட்களையும் தயாரிக்கலாம்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராய்ச்சியை துவங்கினார் ஹாமில்டன். எட்டாண்டுக்குப் பின், சமீபத்தில் தன் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளார். அரிசி உமியில் இருந்து, "சிலிகா'வை தயாரிக்கலாம். அதை வைத்து "ஏரோஜெல்' தயாரித்து, புது வித ரசாயன பொருளை உருவாக்கலாம். அதைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்; குண்டு துளைக்காத கட்டடங்களை கட்டலாம்; விமானம் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்தார்.

"ஏரோஜெல்' புதிதல்ல; 1931ம் ஆண்டில் அமெரிக்கா உட்பட சில நாட்டு விஞ்ஞானிகள், இதை கண்டுபிடித்து, பயன்படுத்தியுள்ளனர். 1999ம் ஆண்டு, அமெரிக்க "நாசா' விண்வெளி விஞ்ஞானிகளும், தங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தியுள்ளனர்.மணலில் இருந்து "சிலிகா' கிடைக்கிறது. அதை, "ஏரோஜெல்'லாக உருவாக்க ஏகப்பட்ட செலவு பிடித்தது. அதனால் அதை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் கைவிட்டனர்.மணலுக்கு பதிலாக அரிசி உமியில் இருந்து "சிலிகா' தயாரிக்கலாம் என்று ஹாமில்டன் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து ஹாமில்டன் கூறுகையில், "நான் கண்டுபிடித்துள்ளதில், உமியில் இருந்து கிடைப்பது 99 சதவீதம் காற்று தான். அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்; பின் வெளிப்படும் வெள்ளை பவுடரில் இருந்து பிளாஸ்டிக் போல, பல்வேறு இலகுரக சாதனங்களை செய்யலாம்; குண்டு தகர்க்க முடியாத வகையில் கட்டடங்களில் சாதனங்களாக பயன்
படுத்தலாம். இன்னும் சில ஆண்டுகள் இதுகுறித்து முழு ஆய்வு செய்த பின், வர்த்தக ரீதியாக தெருக்கு தெரு கிடைக்கும் பொருளாக இது ஆகி விட வேண்டும் என்பது தான் என் கனவு' என்கிறார்.

LATEST:

Grab the widget  Tech Dreams